+ -

عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: "من حلف بغير الله قد كفر أو أشرك"
[صحيح] - [رواه الترمذي وأبو داود وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

இந்நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் தகவலின் தோரணையில் ஒரு தடையை அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ் அல்லாத படைப்பினங்களின் மீது சத்தியம் செய்பவர் அப்படைப்பினத்தை அல்லாஹ்வுக்கு இணையாக எடுத்து, அவனை நிராகரித்து விட்டார் என்பதே அத்தடையாகும், ஏனெனில் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்வது அதனை மகத்துவப்படுத்துவதைக் குறிக்கின்றது, உண்மையான மகத்துவம் அல்லாஹ்வுக்கு மாத்திரமுள்ளதாகும், அவன் மீது, அல்லது அவனது பண்புகள் மீதே தவிர சத்தியம் செய்ய முடியாது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்வது ஹராமாகும், அத்துடன் அது நிராகரிப்பாகவும், இணைவைப்பாகவும் உள்ளது.
  2. சத்தியம் செய்வதன் மூலம் மகத்துவப்படுத்துவது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரித்தான கடமையாகும், அவனல்லாத எதன் மீதும் சத்தியம் செய்வது கூடாது.
  3. அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்ததனால் பரிகாரம் ஏதும் செய்ய வேண்டியதில்லை, அவனிடம் பாவமன்னிப்புக் கோரி, மீள்வதே கட்டாயமாகும்.
  4. அல்லாஹ் அல்லாதோர் மீது சத்தியம் செய்வது சிறிய வகை இணைவைப்பு என்பதே வலுவான கருத்தாகும், அது பெரிய இணைவைப்பு என்று கூறுவோரும் உள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு