عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: "من حلف بغير الله قد كفر أو أشرك"
[صحيح] - [رواه الترمذي وأبو داود وأحمد]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]
இந்நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் தகவலின் தோரணையில் ஒரு தடையை அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ் அல்லாத படைப்பினங்களின் மீது சத்தியம் செய்பவர் அப்படைப்பினத்தை அல்லாஹ்வுக்கு இணையாக எடுத்து, அவனை நிராகரித்து விட்டார் என்பதே அத்தடையாகும், ஏனெனில் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்வது அதனை மகத்துவப்படுத்துவதைக் குறிக்கின்றது, உண்மையான மகத்துவம் அல்லாஹ்வுக்கு மாத்திரமுள்ளதாகும், அவன் மீது, அல்லது அவனது பண்புகள் மீதே தவிர சத்தியம் செய்ய முடியாது.