عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: "مَنْ لَقِيَ الله لا يُشْرِك به شَيئا دخل الجنَّة، ومن لَقِيَه يُشرك به شيئا دخَل النار".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர் நரகில் நுழைவார்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாடு, இறைமைக் கோட்பாடு, பெயர், பண்புகள் எதிலும் அவனுக்கு யாரையும் இணையாக்காத நிலையில் மரணிப்பவர் சுவனம் நுழைவார் என்றும், அவனுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவரின் தங்குமிடம் நரகம் எனவும் நபியவர்கள் இந்நபிமொழியில் எமக்கு அறிவிக்கின்றார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா ஜெர்மன் ஜப்பான் بشتو
மொழிபெயர்ப்பைக் காண

من فوائد الحديث

  1. ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர் நரகில் நிரந்தரமாக்கப்பட மாட்டார், இறுதியில் சுவனம் நுழைவார்.
  2. இணைவைப்பில் மரணித்தவருக்கு நரகம் உறுதியாகி விடுகின்றது.
  3. சுவனம், நரகம் மனிதனுக்கு அருகிலேயே உள்ளன, அவனுக்கும் அவற்றுக்குமிடையில் மரணத்தைத் தவிர வேறு இடைவெளியில்லை.
  4. இணைவைப்பில் வீழ்வதை அஞ்சுவது அவசியமாகும், ஏனெனில் நரகிலிருந்து விடுதலை பெற இணைவைப்பில் இருந்து விலகியிருப்பது நிபந்தனையாகும்.
  5. அதிக நற்செயல்கள் கவனிக்கப்பட மாட்டாது, மாறாக இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதே கவனிக்கப்படும்.
  6. லாஇலாஹ இல்லல்லாஹு என்ற வார்த்தையின் அர்த்தம் இணைவைப்பை விட்டு விட்டு, வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரம் ஒருமைப்படுத்துவதாகும்.
  7. இணைவைப்பிலிருந்து விலகியிருப்பதன் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  8. சுவனம் மற்றும் நரகம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல்.
  9. நற்செயல்களில் இறுதியை வைத்தே முடிவு கணிக்கப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு