عن عبادة بن الصامت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم "مَنْ شهِد أنْ لا إله إلا الله وحده لا شرِيك له وأنَّ محمَّدا عبده ورسُولُه، وأنَّ عِيسى عبدُ الله ورسُولُه وكَلِمَتُه أَلقَاها إِلى مريم ورُوُحٌ مِنه، والجنَّة حَقٌّ والنَّار حقٌّ، أَدْخَلَه الله الجنَّة على ما كان مِنَ العمَل".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (ஆகுக! என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்'.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஏகத்துவ வார்த்தையை மொழிந்து, அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்பட்டு, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமை, தூதர் என சாட்சியம் கூறி, ஈஸா (அலை) அவர்களும் அல்லாஹ்வின் அடிமை, தூதர் என சாட்சியம் கூறி, அவர்கள் மர்யம் (அலை) அவர்களிலிருந்து "ஆகுக" எனும் வார்த்தை மூலம் படைக்கப்பட்டார்கள் என ஏற்பதுடன், யூத எதிரிகள் அவ் அன்னையர் மீது சுமத்திய பலியை விட்டும் அன்னையரைப் பரிசுத்தப்படுத்தி, விசுவாசிகளுக்கு சுவனமும், நிராகரிப்பாளர்களுக்கு நரகமும் உண்டென நம்பிக்கை கொண்டு அதிலேயே மரணித்தால் அவர் செய்த நற்செயல்களுடன் சுவனம் நுழைவார் என நபியவர்கள் எமக்கு அறிவிக்கின்றார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இரு சாட்சியங்களும்தான் இம்மார்க்கத்தின் அடிப்படையாகும்.
  2. ஓரிறைக் கொள்கையின் சிறப்பு, மற்றும் அதனை அல்லாஹ் பாவங்களுக்குப் பரிகாரமாக்குகின்றான்.
  3. அல்லாஹ்வின் தயாளம், பரோபகாரம் என்பவற்றின் விசாலம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  4. ஓரிறைக் கொள்கையானது, யூதம், கிறிஸ்தவம், சிலை வணக்கம், நாத்திகம் போன்ற அனைத்து மதக் கொள்கைகளுக்கும் முரணானதாகும்.
  5. இரு சாட்சியங்களின் அர்த்தங்களை அறிந்து அதன்படி செயல்படாமல் அவ்விரண்டும் செல்லுபடியாக மாட்டாது.
  6. அளவுகடந்து செல்வோர், குறைத்து மதிப்பிடுவோர் இரு தரப்பினருக்கும் மறுப்பு வழங்கும் விதத்தில் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அடிமைத்தனம், இறைத்தூது இரண்டையும் ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளான்.
  7. நபிமார்கள், நல்லடியார்கள் விடயத்தில் அளவுகடந்து செல்லாமலிருப்பதும், குறைத்து மதிப்பிடாமலிருப்பதும் அவசியமாகும், எனவே அவர்களுடைய சிறப்பை எம்மால் மறுக்கவும் முடியாது, மறுபுறம் அளவு கடந்து சென்று சில அறிவீனர்கள், வழிகேடர்கள் செய்வது போன்று வணக்கங்களில் சிலதை அவர்களுக்கு செலுத்தவும் முடியாது.
  8. ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் உள்ளார்கள், இதில் அவர்கள் அல்லாஹ்வின் புதல்வர் என வாதிடும் கிறிஸ்தவர்களுக்கு மறுப்புள்ளது.
  9. ஈஸா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களிலிருந்து "ஆகுக" எனும் வார்த்தை மூலம் தந்தையின்றிப் படைக்கப்பட்டார்கள். இதில் அன்னையருக்கு விபச்சாரப் பழி சுமத்திய யூதர்களுக்கு மறுப்புள்ளது.
  10. ஓரிறைக் கொள்கையுடன் மரணிக்கும் பாவிகள் நரகில் நிரந்தரமாக்கப்பட மாட்டார்கள்.
  11. அல்லாஹ்வுக்கு பேச்சு எனும் பண்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தல்.
  12. மறுமையில் அனைவரும் மீள எழுப்பப்படுவர்.
  13. சுவனம் மற்றும் நரகம் உண்டு என்பதை உறுதிப்படுத்தல்.
மேலதிக விபரங்களுக்கு