عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «إن الله ليُمْلِي للظالم، فإذا أخذه لم يُفْلِتْهُ»، ثم قرأ: (وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد).
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனை தண்டிப்பதில் அவகாசம் வழங்குகிறான்.அவனை தண்டித்தால் அவனை விடவும் மாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஒதினார்கள் :.“மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும் நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்" எனும் வசனத்தை ஓதினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அநியாயக்காரனுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்குவதாகவும்; அவன் தனக்கே அநியாயம் செய்து கொள்வதற்கு விட்டு விட்டு அவ்வாறு அவன் அநியாயம் செய்யும் போது அவனை தண்டிப்பது மட்டுமன்றி முழுமையான தண்டனையை அவனுக்கு அளிக்கும் வரையில் அவனை விட்டு விடமாட்டான் என்று கூறிவிட்டு இந்த திருவசனத்தை ஒதிக்காட்டினார்கள் : “மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும் நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்" எனும் வசனத்தை ஓதினார்கள்.