عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «إن الله ليُمْلِي للظالم، فإذا أخذه لم يُفْلِتْهُ»، ثم قرأ: (وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد).
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனை தண்டிப்பதில் அவகாசம் வழங்குகிறான்.அவனை தண்டித்தால் அவனை விடவும் மாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஒதினார்கள் :.“மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும் நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்" எனும் வசனத்தை ஓதினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அநியாயக்காரனுக்கு அல்லாஹ் அவகாசம் வழங்குவதாகவும்; அவன் தனக்கே அநியாயம் செய்து கொள்வதற்கு விட்டு விட்டு அவ்வாறு அவன் அநியாயம் செய்யும் போது அவனை தண்டிப்பது மட்டுமன்றி முழுமையான தண்டனையை அவனுக்கு அளிக்கும் வரையில் அவனை விட்டு விடமாட்டான் என்று கூறிவிட்டு இந்த திருவசனத்தை ஒதிக்காட்டினார்கள் : “மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும் நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்" எனும் வசனத்தை ஓதினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அறிவுள்ளவன், தான் அநியாயம் செய்தும், தனக்கு ஏதும் ஏற்படவில்லை எனக் கூறி அல்லாஹ்வின் உபாயத்திலிருந்து அச்சமற்றிருக்க மாட்டான். மாறாக அது விட்டுப்பிடித்தல் என்பதை அறிந்து, உரிமைகளை உரியவர்களுக்குக் கொடுப்பதில் விரைவாக செயல்படுவான்.
  2. அநியாயக்காரர்கள் பாவத்தை மென்மேலும் அதிகரித்து, அதற்கான தண்டனையையும் பன்மடங்காப்பதற்காக அல்லாஹ் அவர்களை விட்டுப்பிடுக்கின்றான்.
  3. அல்குர்ஆன், ஸுன்னாவிற்கு அதே மூலதாரங்கள் மூலம் தான் சிறந்த விளக்கத்தை வழங்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு