عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «إنَّ الله لا ينْظُرُ إِلى أجْسَامِكُمْ، ولا إِلى صُوَرِكمْ، وَلَكن ينْظُرُ إلى قُلُوبِكمْ وأعمالكم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரை (ரலி) கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை, இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ் உங்களது உடலமைப்பு, தோற்றத்தை வைத்து உங்களுக்கு கூலி வழங்குவதில்லை, அவற்றின் மூலம் அவனை நெருங்கவும் முடியாது, மாறாக உங்களது உள்ளங்களில் உள்ள உளத்தூய்மை, உண்மை, மற்றும் நீங்கள் செய்யும் நற்காரியங்கள் என்பவற்றை வைத்தே கூலி கிடைக்கின்றது.