عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «إنَّ الله لا ينْظُرُ إِلى أجْسَامِكُمْ، ولا إِلى صُوَرِكمْ، وَلَكن ينْظُرُ إلى قُلُوبِكمْ وأعمالكم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரை (ரலி) கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை, இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ் உங்களது உடலமைப்பு, தோற்றத்தை வைத்து உங்களுக்கு கூலி வழங்குவதில்லை, அவற்றின் மூலம் அவனை நெருங்கவும் முடியாது, மாறாக உங்களது உள்ளங்களில் உள்ள உளத்தூய்மை, உண்மை, மற்றும் நீங்கள் செய்யும் நற்காரியங்கள் என்பவற்றை வைத்தே கூலி கிடைக்கின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உள்ளத்தின் நிலை, அதன் குணங்களில் கவனம் செலுத்தி, அதன் நோக்கங்களைத் திருத்தி, அனைத்து வித மோசமான பண்புகளை விட்டும் உள்ளத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்.
  2. உள்ளத்தில் உள்ள உளத்தூய்மை, நல்லெண்ணம் என்பவற்றை வைத்தே செயல்களுக்குரிய கூலிகள் தீர்மானிக்கப் படுகின்றன.
  3. உறுப்புக்களால் செய்யும் அமல்களை விட உள்ளத்தையும், அதன் குணங்களையும் சீர் திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மார்க்க அமல்களை சீர்திருத்துவது உள்ளம் சார்ந்த எண்ணங்களாகும், எனவேதான் இறைநிராகரிப்பாளனிடமிருந்து நற்செயல் ஏற்கப்பட மாட்டாது.
  4. ஒவ்வொரு மனிதனும் தனது எண்ணம், செயல்களைப் பற்றிப் பொறுப்புடன் இருக்க வேண்டும். இதுதான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் திருப்திப்படுத்தம் ஒவ்வொரு விடயத்தின் பாலும் எண்ணங்களைச் சீராக்கத் தூண்டுகின்றிது.
மேலதிக விபரங்களுக்கு