عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعاً: «إنما الأعمال بِالنيَّات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرتُه إلى الله ورسوله فهجرتُه إلى الله ورسوله، ومن كانت هجرتُه لدنيا يصيبها أو امرأةٍ ينكِحها فهجرته إلى ما هاجر إليه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இது ஒரு மகத்தான நபிமொழியாகும். இதனை சில அறிஞர்கள் இஸ்லாத்தின் மூன்றிலொன்றாகக் கணித்துள்ளார்கள். ஒரு விசுவாசிக்கு அவனது எண்ணம் மற்றும் அதன் திருத்தத்தின் அளவிற்கேற்ப கூலி வழங்கப்படுகின்றான். யாருடைய செயல்கள் அல்லாஹ்வுக்காக மாத்திரம் இருந்தால் நபிவழிக்கு உடன்படுதல் என்ற நிபந்தனையுடன் அது குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். யாருடைய செயல்கள் அல்லாஹ்வுக்காக அன்றி மக்களுக்கு காட்டுவதற்காக இருந்தால் அது பாரியதாக, அதிகமானதாக இருந்தாலும் தட்டப்படும். அல்லாஹ்வுக்காக அல்லாது, பெண், பொருள், பதவி போன்ற உலக நோக்கத்திற்காக செய்யப்படும் அனைத்து அமல்களும் அதனுடையவர்களுக்கே திருப்பப்பட்டுவிடும், அல்லாஹ் ஏற்க மாட்டான். ஏனெனில் நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கான பிரதான இரு நிபந்தனைகள் உளத்தூய்மையும், நபிவழியுமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உளத்தூய்மை இங்கு தூண்டப்பட்டுள்ளது, ஏனெனில் அல்லாஹ் நற்செயல்களில் அவனுக்காக செய்யப்பட்டதை மாத்திரமே ஏற்கின்றான்.
  2. அல்லாஹ்வை நெருங்குவதற்காக செய்யப்படும் அமல்களை அவை சரியானதாக இருந்தாலும் ஒரு மனிதன் வழமை என்ற அடிப்படையில் செய்தால் அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடும் வரை அதற்கான கூலி வழங்கப்பட மாட்டாது.
  3. அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வதன் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது, இது அல்லாஹ்வுக்காகச் செய்யப்படுவதால் நற்செயல்களில் சேருகின்றது.
  4. இஸ்லாத்தின் அனைத்து விடயங்களுக்கும் அச்சாணியாக கருதப்படும் நபிமொழிகளில் இதுவும் ஒன்றாகும். இதனால்தான் அறிஞர்கள் கூறினார்கள் : இஸ்லாத்தின் அனைத்து விடயங்களும் சுற்றிவருவது இரு நபிமொழிகளிலாகும், ஒன்று இந்த நபிமொழி, மற்றது “நம்முடைய விடயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது ஏற்றுக் கொள்ளப்படாது ஒதுக்கப்படும்” என்ற ஆஇஷா ரலி அவர்கள் அறிவிக்கும் நபிமொழியாகும். இது உள்ளம் சார்ந்த அமல்களின் அடிப்படையாகும், உள்ரங்கமான அமல்களின் அளவுகோல் இதுவாகும், ஆஇஷா (ரலி) அவர்களது செய்தி உறுப்புக்கள் சார்ந்த அமல்களின் அடிப்படையாகும்.
  5. வணக்கங்களுக்கிடையில் வேறுபிரித்துப் பார்ப்பதும், வணக்கங்களை கொடுக்கல் வாங்கலை விட்டும் வேறுபிரித்துப் பார்ப்பதும் அவசியமாகும், தோற்றத்தில் ஒரே மாதிரியான அமல்களில் நிய்யத் எண்ணத்தைத் தவிர வேறு முறையில் பிரித்துப் பார்க்க முடியாது.
  6. நோக்கமின்றி எச்செயலும் வீணானதாகும், அதற்கென சட்டமோ, கூலியோ வர மாட்டாது.
  7. தனது செயலில் உளத்தூய்மையுடன் இருந்தால் சட்டரீதியாகவும், கூலியிலும் அவரது நோக்கம் நிறைவேறிவிடும், அவரது செயல் முறையானதாக ஆகிவிடும், அமல்களுக்குரிய நிபந்தனைகள் பூர்த்தியானால் அதற்குரிய கூலியும் கிடைக்கும்.
  8. உளத்தூய்மையற்ற செயல்கள் அழிந்து விடும்.
  9. "அவர் அதற்கான பலனையே அடைவார்" என்ற வார்த்தையின் மூலம் இவ்வுலகும் அதன் ஆசைகளும் தாழ்த்திக் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வுக்காகவும், தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்தவரின் கூலியை அவ்விருவருக்காகவும்தான் என வெளிப்படையாகக் கூறிவிட்டு, உலக நோக்கத்திற்கா ஹிஜ்ரத் செய்தவரின் கூலியை வெளிப்படையாகக் கூறாமல் மேற்கண்டவாறு மூடலாகவே கூறப்பட்டுள்ளது. இது அழகான அணியிலக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டாகும்.
மேலதிக விபரங்களுக்கு