عن خولة الأنصارية رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : «إن رجالاً يَتَخَوَّضُون في مال الله بغير حق، فلهم النار يوم القيامة».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கவ்லா அல்அன்ஸாரிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
முஸ்லிம்களின் உடமைகளைத் தவறான முறையில் பயன்படுத்தும் சில மனிதர்களை நபியவர்கள் கூறி, அவர்கள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சுரண்டுகின்றனர் என்பதைக் கூறுகின்றார்கள். அநாதைகளின் சொத்துக்கள், வக்பு சொத்துக்களை தகுதியற்றவர்கள் சுரண்டுதல், அமானிதங்களை மறுத்தல், பொது நிதியிலிருந்து அனுமதியோ, தகுதியோ இல்லாமல் எடுத்தல் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. இவர்களுக்குரிய கூலி நரகம்தான் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.