عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : «أَبْغَضُ الرِّجَالِ إِلى اللهِ الأَلَدُّ الخَصِمُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

சத்தியத்திற்குக் கட்டுப்படாமல் எப்போது பார்த்தாலும் கடுமையாக வாதம் புரிந்து கொண்டிருப்பவனை வெறுக்கின்றான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அதிகமாக தர்க்கத்தில் ஈடுபடும் மனிதனை அல்லாஹ் வெறுக்கின்றான்.
  2. அநீதியிழைக்கப்பட்ட நிலையில் தனது உரிமைக்காக மார்க்க விதிமுறைப்படி, சட்டபூர்வமான வழக்குகளின் அடிப்படையில் விவாதிப்பதில் ஆட்சேபனையில்லை, இது தடுக்கப்பட்ட தர்க்கங்களில் நுழைய மாட்டாது.
  3. ஒரு மனிதன் வாதிக்கும் போது தனது உரிமையை அடைந்து கொள்வதற்கான போதிய ஆதாரம் அவன் கைவசம் இருக்க வேண்டும், அத்துடன் எல்லை மீறி கடுமையாக விவாதிக்கவும் கூடாது.
  4. இங்கு முன்னுரிமை அடிப்படையில்தான் ஆண்கள் கூறப்பட்டுள்ளனர், இல்லையெனில் இத்தடைச் சட்டத்தில் பெண்ணும் ஆணைப் போன்றவள்தான்.
  5. சத்தியத்திற்காக தேவையேற்படும் போது தர்க்கித்து, அதில் பிரதிவாதியை மிகைப்பவர் சத்தியவாதியாவார், இவர் அல்லாஹ்விடம் நேசத்திற்குரியவரே அன்றி வெறுப்புக்குரியவரல்ல.
  6. அல்லாஹ்வின் தகுதிக்கேற்ப அவனுக்கு கோபம் எனும் பண்பு உள்ளதற்கு இந்நபிமொழியில் சான்றுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு