+ -

عن عائشة رضي الله عنها مرفوعاً: «لا تسبوا الأموات؛ فإنهم قد أفضوا إلى ما قدموا».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்''.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

இறந்தோரை ஏசுவதும், அவர்களது மானத்தில் கை வைப்பதும் ஹராம் என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாக உள்ளது. இத்தடைக்குரிய காரணம் ஹதீஸின் மீதியில் கூறப்பட்டுள்ளது: ''ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்''. அதாவது அவர்கள் செய்த நன்மை, தீமைகளை அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள். பின்னால் வந்தோரின் இந்த ஏச்சு அவர்களைச் சென்றடையாது, உயிரோடுள்ளவர்களை தான் பாதிக்கும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية القيرقيزية النيبالية اليوروبا الليتوانية الدرية الصربية الصومالية الكينياروندا
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இறந்தோரை ஏசுவது ஹராம் என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாக உள்ளது. அவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கலாம், காபிர்களாகவும் இருக்கலாம் என்பதையே இந்நபிமொழியின் பொதுப்படையான வார்த்தை மூலம் அறிவிக்கின்றது.
  2. இறந்தவர்களின் குறைகளைக் கூறுவதில் பயனிருந்தால் அவர்களை ஏசுவதிலிருந்து அது மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படும்.
  3. இத்தடைக்குரிய காரணம் ஹதீஸில். அவர்கள் செய்த நன்மை, தீமைகளை அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள் என்பதே அக்காரணமாகும். பின்னால் வந்தோரின் இந்த ஏச்சு அவர்களைச் சென்றடையாது, உயிரோடுள்ள அவர்களின் சொந்தங்களை தான் பாதிக்கும்.
  4. பயனற்ற எந்தவொன்றையும் பேசுவது ஒரு மனிதனுக்கு ஆகாது.
மேலதிக விபரங்களுக்கு