عن عائشة رضي الله عنها مرفوعاً: «لا تسبوا الأموات؛ فإنهم قد أفضوا إلى ما قدموا».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்''.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
இறந்தோரை ஏசுவதும், அவர்களது மானத்தில் கை வைப்பதும் ஹராம் என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாக உள்ளது. இத்தடைக்குரிய காரணம் ஹதீஸின் மீதியில் கூறப்பட்டுள்ளது: ''ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்''. அதாவது அவர்கள் செய்த நன்மை, தீமைகளை அவர்கள் கொண்டு சென்றுவிட்டார்கள். பின்னால் வந்தோரின் இந்த ஏச்சு அவர்களைச் சென்றடையாது, உயிரோடுள்ளவர்களை தான் பாதிக்கும்.