عن جبير بن مطعم رضي الله عنه مرفوعاً: «لا يدخل الجنة قاطع».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''உறவை முறித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்''.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
உறவைத் துண்டிப்பது ஹராம், அது பெரும் பாவங்களில் ஒன்று என்பதற்கு இந்த நபிமொழி ஆதாரமாகவுள்ளது. இங்கு சுவனம் நுழைய மாட்டான் என்பதன் அர்த்தம் எவ்விதத் தண்டனையுமின்றி சுவனம் நுழைய மாட்டான் என்பதே தவிர அறவே சுவனம் நுழைவதை மறுப்பதல்ல. ஏனெனில் உறவைத் துண்டிப்பவன் சுவனம் ஹராமான காபிரல்ல, மாறாக அவனிடம் ஓரிறைக் கொள்கை இருக்கும் காலமெல்லாம் அவன் தங்குமிடம் சுவனம்தான். எனினும் அவனது பாவத்தின் அளவிற்கேற்ப தண்டனைக்குப் பின்னரே அப்பிரவேசம் நிகழும்.