عن حذيفة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا يدخل الجنة قَتَّات».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) கூறுகின்றார்கள் : "கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
மக்களிடையே குழப்ப நிலையை உருவாக்கும் நோக்கில் கோள் சொல்லித் திரிபவனுக்கு அவன் சுவனம் நுழைய மாட்டானென நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். அதாவது அவனது பாவத்தின் அளவிற்கேற்ப தண்டனைக்குப் பின்னர் சுவனம் நுழைவானே தவிர முதலிலேயே நுழைய மாட்டான். இந்நபிமொழியின் படி கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.