عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
«مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5986]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
யார் தனது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப் படுவதையும் விரும்புகிறவர் தம் குடும்ப உறவைப் பேணி வாழட்டும்'.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 5986]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் சந்திப்பின் மூலமும் உடலாலும் பொருளாலும் இவையல்லாத வேறு முறைகளிலும் உறவுகளை கண்ணியப்படுத்தி அவர்களுடன் உறவைப் பேணி வாழுமாறு ஊக்குவிக்கிறார்கள். ஏனெனில் வாழ்வாதாரம் பெருகுவதற்கும் நீண்ட ஆயுல் கிடைக்கவும் உறவைப்பேணி வாழுவது காரணமாக உள்ளது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உறவு என்பது தந்தை மற்றும் தாய் வழி உறவுகளைக் குறிக்கும். உறவானது எவ்வளவு நெருக்கமானதாக உள்ளதோ அந்தளவில் அவர்களுடன் உறவைப்பேணி நடப்பதற்கு முன்னுரிமை பெறுவர்.
  2. செயலின் தன்மைக்கேட்பவே கூலி உண்டு, அந்த வகையில் யார் தனது உறவுகளுடன் அவர்களுக்கு உபகாரம் புரிவதன் மூலமும் நன்மை செய்வதன் மூலமும் உறவைப்பேணி நடக்கிறாரோ அவரின் ஆயுளையும் வாழ்வாதாரத்தையும் அல்லாஹ் நீடித்து வைக்கிறான்.
  3. குடும்ப உறவைப் பேணுதல் வாழ்வாதாரம் பெருகி,விசாலமாக்கப்படவும், ஆயுள் நீடிக்கவும் காரணமாக அமைகிறது. ஆயுளும் வாழ்வாதாரமும் வரையறுக்கப்பட்டிருந்தாலும் அதுவும் சிலவேளை ரிஸ்கிலும் ஆயுளிலும் கிடைத்த பரகத்தாக இருக்கலாம். அந்த ஆயுளில் ஏனையோரைவிட மிகவும் பயனுள்ள அதிகமான விடயங்களை அவர் செய்திருப்பார். வாழ்வாதாரமும் ஆயுளும் அதிகரித்தல் என்பது யதார்த்தமான அதிரிப்பையே குறிக்கிறது.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (67)
மேலதிக விபரங்களுக்கு