عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا تجعلوا بيوتكم قبورا، ولا تجعلوا قبري عيدا، وصلوا عليّ فإن صلاتكم تبلغني حيث كنتم».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களது வீடுகளை சமாதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாட்ட இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது".
ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஸுன்னத்தான தொழுகைகள், துஆ, குர்ஆன் ஓதுதல் போன்ற எந்த வணக்கமுமின்றி வீடுகளை சமாதிகளைப் போன்று ஆக்க வேண்டாமென நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஏனெனில் சமாதிகளில் தொழக்கூடாது என்ற சட்டம் அவர்களிடம் உறுதியானதாக இருந்தது, எனவேதான் அதைப்போன்ற தொழாத இடமாக வீடுகளை ஆக்க வேண்டாமெனத் தடுத்தார்கள். தனது சமாதியை அடிக்கடி தரிசித்து, ஒன்று கூடுவதை வழமையாக்கிக் கொள்ள வேண்டாமெனவும் தடுத்தார்கள், ஏனெனில் அதுவும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். அதற்குப் பதிலாக பூமியில் எங்கிருந்தாலும் தன் மீது ஸலவாத், ஸலாம் சொல்வதை அதிகப்படுத்துவதுடன் போதுமாக்கிக் கொள்ளுமாறு பணித்தார்கள். ஏனெனில் அண்மையிலுள்ளவர், தொலைவிலுள்ளவர் அனைவரிடமிருந்தும் ஸலவாத் ஓரே விதமாகவே தனக்கு வந்தடைகின்றது, எனவே அடிக்கடி தனது சமாதிக்கருகில் வந்துபோக வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வீடுகளில் அல்லாஹ்வை வணங்காமல் வெறுமையாக்குவது கூடாது.
  2. சமாதிகளில் தொழுதல், நபியவர்களின் சமாதியை அடிக்கடி தரிசித்து, குறிப்பிட்ட தரிசிப்புக்களை ஏற்பாடு செய்து, வழமையாக்கிக் கொள்வதன் மூலம் அவ்விடயத்தில் அளவுகடந்து செல்லல் போன்ற இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் வழிகளை அடைத்தல்.
  3. நபியவர்களின் சமாதியைத் தரிசிக்கும் நோக்கத்தில் பயணம் மேற்கொள்வது தடையாகும்.
  4. ஓரிறைக் கொள்கையின் மகத்துவத்தை நபியவர்கள் பாதுகாக்கும் முறை இங்கு தெளிவாக உள்ளது.
  5. நபியவர்களின் சமாதிக்கருகில் இருப்பதால் எவ்வித தனிச் சிறப்புமில்லை.
  6. பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் நபியவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் சொல்வது மார்க்க சட்டத்திலுள்ளதாகும்.
  7. சமாதிகளில் தொழுவது ஹராமாகும்.
  8. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட முறையில் நபி (ஸல்) அவர்களின் சமாதியைத் தரிசிக்கும் கொண்டாட்ட இடமாக ஆக்கிக் கொள்வது ஹராமாகும். அதே போன்றுதான் அனைத்து சமாதிகளும்.
  9. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பிரார்த்தனை மூலம் பயனடைகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு