عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا تجعلوا بيوتكم قبورا، ولا تجعلوا قبري عيدا، وصلوا عليّ فإن صلاتكم تبلغني حيث كنتم».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களது வீடுகளை சமாதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாட்ட இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது".
ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்
ஸுன்னத்தான தொழுகைகள், துஆ, குர்ஆன் ஓதுதல் போன்ற எந்த வணக்கமுமின்றி வீடுகளை சமாதிகளைப் போன்று ஆக்க வேண்டாமென நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஏனெனில் சமாதிகளில் தொழக்கூடாது என்ற சட்டம் அவர்களிடம் உறுதியானதாக இருந்தது, எனவேதான் அதைப்போன்ற தொழாத இடமாக வீடுகளை ஆக்க வேண்டாமெனத் தடுத்தார்கள். தனது சமாதியை அடிக்கடி தரிசித்து, ஒன்று கூடுவதை வழமையாக்கிக் கொள்ள வேண்டாமெனவும் தடுத்தார்கள், ஏனெனில் அதுவும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். அதற்குப் பதிலாக பூமியில் எங்கிருந்தாலும் தன் மீது ஸலவாத், ஸலாம் சொல்வதை அதிகப்படுத்துவதுடன் போதுமாக்கிக் கொள்ளுமாறு பணித்தார்கள். ஏனெனில் அண்மையிலுள்ளவர், தொலைவிலுள்ளவர் அனைவரிடமிருந்தும் ஸலவாத் ஓரே விதமாகவே தனக்கு வந்தடைகின்றது, எனவே அடிக்கடி தனது சமாதிக்கருகில் வந்துபோக வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்கள்.