عن أبي بَكْرَةَ- رضي الله عنه - عن النبي صلى الله عليه وسلم أنه قال: «أَلا أُنَبِّئُكم بِأَكْبَرِ الْكَبَائِر؟»- ثَلاثا- قُلْنَا: بَلى يا رسول الله، قَالَ: «الإِشْرَاكُ بِالله وَعُقُوقُ الوالدين، وكان مُتَّكِئاً فَجَلس، وَقَال: ألا وَقَوْلُ الزور، وَشهَادَةُ الزُّور»، فَما زال يُكَرِّرُها حتى قُلنَا: لَيْتَه سَكَت.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"பாவங்களில் பெரியதை உமக்கு அறிவிக்கட்டுமா?" என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள். நாம் "ஆம் அல்லாஹ்வின் தூதரவர்களே!" எனக் கூறினோம். அப்போது "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரைத் துன்புறுத்தல்" என்று கூறினார்கள். பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ''அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும், பொய்ச் சாட்சியம் கூறுவதும் (மிகப் பெரிய பாவம்தான்)'' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் 'அவர்கள் நிறுத்தமாட்டார்களா?' என்றோம்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

நபி ஸல் அவர்கள் தனது தோழர்களிடம் பாவங்களில் மிகப் பெரியதை அறிவிக்கட்டுமா எனக் கேட்டு விட்டு இம்மூன்றையும் கூறினார்கள். இணைவைத்தல், இது இறைமையில் அத்துமீறுவதாகும், அல்லாஹ்விற்கு மாத்திரமுள்ள உரிமையை எடுத்து, அதற்குத் தகுதியற்ற பலவீனமான படைப்பினங்களுக்கு வழங்குவதாகும். பெற்றோரைத் துன்புறுத்தல், இது மிக மோசமான பாவச் செயலாகும், ஏனெனில் இது மிக நெருங்கிய உறவிலிருந்து எமக்குக் கிடைத்த உபகாரத்திற்குப் பிரதியீடாக நோவினையை அவர்களுக்கு வழங்குவதாகும். பொய்ச் சாட்சியம் என்பது ஒருவருடைய பொருளாதாரத்தை உரிமையின்றி சுரண்டுவதற்காகவோ, அவருடைய மானத்தில் அத்துமீறுவதற்காகவோ பொய்யாக சோடிக்கப் பட்ட அனைத்து வித வார்த்தைகளையும் உள்ளடக்குகின்ற ஒரு பொதுவான சொற்பிரயோகமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மார்க்க சட்டங்களை மக்களிடம் கேள்வித் தோரணையில் எத்தி வைக்க முடியும் என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது.
  2. பாவங்களில் கொடூரமானது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும், ஏனெனில் நபியவர்கள் இதனைத் தான் பாவங்களின் தலையாததாக ஆக்கியுள்ளார்கள்."அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான், அதுவல்லாததைத் தான் நாடியோருக்கு மன்னிக்கின்றான்" என்ற இறைவசனம் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
  3. பெற்றோருக்குரிய கடமைகளின் பாரதூரம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, ஏனெனில் அதனை அல்லாஹ் தனக்கு செய்ய வேண்டிய கடமையுடன் சேர்த்துக் கூறியுள்ளான்.
  4. பொய்ச் சாட்சியத்தின் விபரீதம், முஸ்லிம் சமூக வாழ்வில் அதன் தீய தாக்கங்களை இந்நபிமொழி எடுத்துக் காட்டுகின்றது. அது பண்பாட்டு ரீதியானதாக இருந்தாலும், சமூக வாழ்வின் ஏனைய அங்கங்களாக இருந்தாலும் சரி.
மேலதிக விபரங்களுக்கு