عن عائشة رضي الله عنها مرفوعاً: «اللهم من وَلِيَ من أمر أمتي شيئاً، فشَقَّ عليهم؛ فاشْقُقْ عليه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றை பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக!".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

முஸ்லிம்களின் விடயங்களில் சிறிய பொறுப்போ, பெரிய பொறுப்போ ஏற்று, அவர்களுக்கு சிரமம் கொடுப்போருக்கு இந்நபிமொழியில் கடுமையான எச்சரிக்கை உள்ளது. அவர்களுடைய செயலுக்கேற்ற கூலியை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் இத்தகையோருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தலைவர்கள், பணியாளர்களுக்கு இந்நபிமொழியில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.
  2. முஸ்லிம்களின் விடயங்களைப் பொறுப்பேற்றவர்கள் அவர்களுடன் முடியுமானளவு மென்மையாகவே நடக்க வேண்டும்.
  3. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.