عن عبادة بن الصامت رضي الله عنه قال: بَايَعْنَا رسول الله صلى الله عليه وسلم على السَّمع والطَّاعَة في العُسْر واليُسْر، والمَنْشَطِ والمَكْرَه، وعلَى أَثَرَةٍ عَلَينا، وعلى أَن لاَ نُنَازِعَ الأَمْر أَهْلَه إِلاَّ أَن تَرَوْا كُفْراً بَوَاحاً عِندَكُم مِن الله تَعَالى فِيه بُرهَان، وعلى أن نقول بالحقِّ أينَما كُنَّا، لا نخافُ فِي الله لَوْمَةَ لاَئِمٍ.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர அவர்களுடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

"நாம் உறுதிமொழி அளித்தோம்" அதாவது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களது கட்டளைகளைச் செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்பதாக உறுதிமொழி அளித்தனர். ஏனெனின் அல்லாஹ் "நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறுகின்றான். நபியவர்களுக்குப் பின்னரான காலத்தில் அதிகாரம் வகிப்பவர்கள் இரு பிரிவினராகும் : மார்க்க அறிஞர்கள், ஆட்சியாளர்கள். அறிவு, தெளிவூட்டல் போன்றவற்றில் மார்க்க அறிஞர்களும், அமுல்படுத்தல், அதிகாரம் செலுத்தல் போன்றவற்றில் ஆட்சியாளர்களும் அதிகாரம் வகிப்பவர்களாக உள்ளனர். செவியுற்றுக் கீழ்ப்படிவதாக உறுதிமொழி அளித்ததாகக் கூறுகின்றார். இங்கு "இன்பத்திலும் துன்பத்திலும்" எனும் சொற்பிரயோகம் பிரஜைகள் வறியவர்களாக இருந்தாலும், வசதியுடன் இருந்தாலும் அனைவரும் தலைமைக்குக் கட்டுப்படல் அவசியமாகும் என்பதைக் குறிக்கின்றது. "விருப்பிலும் வெறுப்பிலும்" என்பது தாங்கள் விரும்பாததைப் பணித்திருப்பதால் தலைமைகள் மீது வெறுப்புடன் இருந்தாலும், தமக்குப் பொருந்தக்கூடிய, விரும்பக் கூடியதைப் பணித்திருப்பதால் அவர்கள் மீது விருப்புடன் இருந்தாலும் கட்டுப்படல் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. "எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும்" என்பது ஆட்சித் தலைமைகள் தமது ஆடம்பர வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக பொது நிதியிலிருந்து அல்லாஹ் பொறுப்பாக்கிய தமது பிரஜைகளுக்குச் சேர வேண்டியதைத் தராமல் தடுத்துக் கொண்டாலும் கட்டுப்படல் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. "அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம்" என்பது எமது விடயங்களில் அல்லாஹ் பொறுப்பாக்கிய தலைமைகளுடன் ஆட்சியைப் பறிப்பதற்காகப் போரிடக் கூடாது என்பதைக் குறிக்கின்றது, ஏனெனில் இந்தப் போராட்டம் அதிக தீங்குகளையும், பாரிய குழப்பங்களையும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும் தோற்றுவிக்கின்றது. உஸ்மான் (ரலி) அவர்களது காலம் முதல் இன்று வரை இஸ்லாமிய சமூகத்தை அழித்தது ஆட்சித் தலைமைகளுக்கெதிரான கிளர்ச்சிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. "எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர அவர்களுடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம்" எனும் வாக்கியத்தில் நான்கு நிபந்தனைகள் உள்ளன. இந்த நான்கும் அவர்களிடம் முழுமையாக ஒருசேரக் கண்டால் மாத்திரமே அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றி, வேறொருவரை ஆட்சியில் அமர்த்துவோம், அந்த நிபந்தனைகளாவன : 1. நேரில் கண்டறிய வேண்டும், வெறும் ஊகங்களை வைத்து தலைமைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது. 2. கண்டது பாவமாக அல்லாமல் இறைநிராகரிப்பாக இருத்தல் வேண்டும். ஆட்சியாளர்கள் மது அறுந்துதல், விபச்சாரம் செய்தல், மக்களுக்கு அநீதியிழைத்தல் போன்ற பாவங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்ய முடியாது. ஆனால் வெளிப்படையான, தெளிவான நிராகரிப்பைக் கண்டால் மாத்திரம் கிளர்ச்சி செய்ய முடியும். 3. அந்த நிராகரிப்பு தெளிவானதாக வெளிப்படையானதாக இருத்தல் வேண்டும். மாற்றுக் கருத்துக்கு இடம்பாடுள்ள, நிராகரிப்பா இல்லையா என்பதில் கருத்து வேற்றுமையுள்ள விடயங்களுக்காக அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முடியாது. ஆனால் விபச்சாரம், மது போன்றவற்றை ஹலாலாகக் கருதுவது போன்ற வெளிப்படையான, தெளிவான நிராகரிப்பைக் கண்டால் மாத்திரம் கிளர்ச்சி செய்ய முடியும் 4. "அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்திருக்க வேண்டும்". அதாவது குறித்த அந்த செயல் நிராகரிப்பு என்பதற்கான ஆதாரம் எம்மிடம் உறுதியாக இருக்க வேண்டும், ஆதாரமோ, ஆதாரம் எடுத்த முறையோ பலவீனமாக இருந்தால் அப்போது அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் அதனால் ஏற்படும் விபரீதங்கள் மிக அதிகமானவை, இந்த நிபந்தனைகளுக்கேற்ப நிராகரிப்பைக் கண்டாலும் அதனைத் தடுப்பதற்குரிய சக்தி எம்மிடம் இருந்தால் மாத்திரம்தான் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் பிரஜைகளிடம் போதிய ஆயத்தமின்றி கிளர்ச்சிக்கு இறங்கினால் மீதமுள்ள நல்லடியார்களையும் அழித்து முழு ஆதிக்கமும் தீய தலைமைகளிடமே சென்று விடும். இந்த நிபந்தனைகள் கிளர்ச்சி ஆகுமாவதற்காகவும் இருக்கலாம், கடமையாவதற்கும் இருக்கலாம். எவ்வாறாயினும் பிரஜைகளிடம் போதியளவு தயார் இல்லையெனில் அது தம்மையே மாய்த்துக் கொள்வதாகி விடும், அதனால் பயனேதுமில்லை.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பாவமல்லாத விடயங்களில் முஸ்லிம் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவதை இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது.
  2. இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள அனைத்துவிதக் கட்டுப்படுதலின் பயன் முஸ்லிம்களின் ஒற்றுமை, அவர்களிடையே பிரிவினை, கருத்துவேறுபாடுகளைக் களைதல் என்பனவாகும்.
  3. உறுதிப்படுத்தப்பட்ட இறைநிராகரிப்பு அவர்களிடமிருந்து வெளிப்பட்டாலே தவிர தலைமைகளின் அதிகாரத்தைப் பறிக்க சண்டையிடுவது கூடாது, அவ்வாறு நிராகரிப்பு காணப்படும் போது எவ்வளவு தியாகம் செய்தாயினும் அதனைத் தட்டிக்கேட்டு, சத்தியம் மேலோங்கச் செய்ய வேண்டும்.
  4. ஆட்சியாளர்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வது ஒருமித்த கருத்தின் படி ஹராமாகும். ஏனெனில் அவர்களுக்கெதிரான கிளர்ச்சியில் அவர்களுடைய பாவங்களை விட பாரதூரமான பின்விளைவுகளே அதிகமுள்ளன. எனவே இரு கெடுதிகளில் விபரீதம் குறைந்ததையே செய்ய வேண்டும்.
  5. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் மாத்திரமே ஆட்சித் தலைவருக்கு உறுதுமொழி வழங்க வேண்டும்.
  6. மனோஇச்சைக்கு முரண்பட்டாலும் விருப்பு, வெறுப்புகளிலும், இன்ப, துன்பங்களின் போதும் நல்ல விடயங்களில் ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது அவசியமாகும்.
  7. தலைவர்களின் உரிமைகளை மதித்தல் வேண்டும். இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கும் போதும் மக்கள் அவர்களுக்குக் கட்டுப்படுவது அவசியமாகும்.