عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنين رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا قَطُّ ضَاحِكًا، حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6092]
المزيــد ...
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தமது சிறுநாக்குத் தென்படும் அளவு வாயைத் திறந்து பலமாக சிரித்ததை நான் கண்டதில்லை. மாறாக, புன்முறுவலாகவே சிரிப்பார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 6092]
சிறுநாக்கு (தொண்டையின் மேற்பகுதியில் உள்ள சதைத் துண்டு) தென்படும் அளவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அளவுகடந்து சிரிக்கமாட்டார்கள் எனவும், புன்முறுவலாகவே சிரிப்பார்கள் எனவும் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.