عَنِ ابْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عنهما أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
«اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ».
[صحيح] - [متفق عليه، وهذا لفظ مسلم ورواه البخاري مختصرًا] - [صحيح مسلم: 2717]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள் என, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
«اللهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ».
(பொருள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப் பட்டு விட்டேன்! உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். உன்னிடமே மீளுகின்றேன். உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. என்னை நெறிபிரழச் செய்யாமல் இருக்குமாறு, உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன். மரணிக்காத நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே! ).
[சரியானது] - [இமாம்களான புஹாரி, முஸ்லிம் இருவரும் இதை பதிவு செய்துள்ளனர். இந்த வாசகம் முஸ்லிமுக்குரியது, புஹாரி இதனை சுருக்கமாக அறிவித்துள்ளார்] - [முஸ்லிம் - 2717]
நபியவர்கள் தமது துஆவில் இவ்வாறு கூறுவார்கள் : யா அல்லாஹ்! நான் உனக்குக் கட்டுப்பட்டுவிட்டேன்! (வழிப்பட்டுவிட்டேன்) உன்னை விசுவாசம் கொண்டு விட்டேன். (உன்னை உண்மைப்படுத்தி, ஏற்றுக் கொள்கின்றேன்) உன் மீதே பொறுப்புச் சாட்டுகின்றேன். (உன்னை நம்பி இருக்கின்றேன்) உன்னிடமே மீளுகின்றேன். (உன்னை நோக்கியே மீண்டு வருகின்றேன்) உன்னைக் கொண்டே தர்க்கிக்கின்றேன். (உனது எதிரிகளுடன் விவாதிக்கின்றேன்) யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை. (உண்மையாக வணங்கப்படத் தகுதியானவர்கள் உன்னைத் தவிர யாரும் இல்லை) என்னை (நேர்வழி மற்றும் உனது திருப்தியைப் பெரும் பாக்கியம் ஆகியவற்றை விட்டும்) நெறிபிரழச் செய்வதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு (அதாவது உனது பலத்தைக் கொண்டு) பாதுகாப்புக் கேட்கின்றேன். (உன்னிடமே ஒதுங்குகின்றேன்) மரணிக்காத (அழிந்து போகாத) நித்திய ஜீவன் நீயே! ஜின்களும் மனிதர்களும் மரணிப்பவர்களே!.