عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ، فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"c2">“நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான்.ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள்.ஏனெனில் இஸ்ரவேல் சந்ததிகளில் தோன்றிய குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் விவகாரத்திலாகும்”
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகமானது சுவையில் இனிமையானது எனவும் பார்ப்பதற்கு கவர்ச்சி நிறைந்ததாகவும் உள்ளது என தெளிவுபடுத்துகிறார்கள்.இவ்வாறு நபியவரகள் கூறக் காரணம் என்னவெனில் மனிதன் இதில் கவர்ச்சியுற்று மூழ்ச்செல்வது மாத்திரமல்லாது அதனையே தனது முழு இலக்காகவும் ஆக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது என்தினாலாகும். நாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோமா அல்லது கட்டுப்படாது நடக்கிரோமா ? என்ற எமது செயல் முறை குறித்து அவதானிக்கவே இவ்வுலகில் எம்மை ஒருவர் பி;ன் ஒருவராக பிரதிநிதியாக வைத்துள்ளான். மேலும் நபியர்கள் இந்த ஹதீஸில் இவ்வுலக பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பணிக்கிறார்கள் ஏனெனில் இவ்வுலக இன்பங்களில் திழைத்திருப்பது அல்லாஹ் உங்களுக்கிட்ட கட்டளைகளை விட்டுவிட்டு அவன் தடுத்தவிடயங்களின் பால் அவை இட்டுச்செல்ல வழிவகுத்துவிடும். இஸ்ரவேல் சந்ததிகளில் ஏற்பட்ட குழப்பங்கள்pல் முதன்மையானது பெண்கள் சம்பந்தப்பந்தப்பட்டது என்பதினால்,உலக கவர்ச்சிகளில் பெண்களின் கவர்ச்சியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதே மிக முக்கிய விடயமாகும்