عن عائشة رضي الله عنها قالت: كان خُلُقُ نَبي اللِه صلى الله عليه وسلم القرآن.
[صحيح] - [رواه مسلم في جملة حديثٍ طويلٍ]
المزيــد ...
ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாக இருந்தது.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அதாவது நபி (ஸல்) அல் குர்ஆனின் நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். அல்குர்ஆன் ஏவியவற்றை நிறைவேற்றினார்கள். அல்குர்ஆன் தடுத்தவற்றை தவிர்ந்திருந்தார்கள். அவற்றை அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளிலும் அடியார்களுடனான உறவாடல்களிலும் கடைப்பிடித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் இதன் மூலம் எமக்கு சுட்டிக்காட்டுவது என்னவெனில் நாம் நபி (ஸல்) அவர்களின் பண்புகளை கடைப்பிடிக்க விரும்பினால் அல் குர்ஆன் குறிப்பிடும் நற்குணங்களைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நபி (ஸல்) அவர்களின் பண்பாடாக இருந்தது என்பதுதான்.