عن معقل بن يسار رضي الله عنه مرفوعاً: «ما من عبد يَسْتَرْعِيْهِ الله رَعِيَّةً، يموت يوم يموت، وهو غاشٌّ لِرَعِيَّتِهِ؛ إلا حرَّم الله عليه الجنة».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மஃகல் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
மஃகல் பின் யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்நபிமொழியில் பிரஜைகளை ஏமாற்றுவதை எச்சரிக்கப்பட்டுள்ளது : "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க" : அதாவது மக்களின் தேவைகளை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய அவர்களது விவகாரங்களில் கட்டுப்பாட்டைக் கொடுப்பதன் மூலம் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள், உண்மையான பொறுப்பாளன் என்பது தான் பொறுப்பை முறையாகப் பாதுகாக்கும் ஒரு நம்பிக்கையான பாதுகாவனலாகும். "அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால்" : அதாவது பாவமன்னிப்புக் கோரல் ஏற்கப்படாத சந்தர்ப்பமான உயிர் போகும் வரை ஏமாற்றி மோசடி செய்தவரே இங்கு நாடப்பட்டுள்ளார். மோசடி, அலட்சியத்திற்காக பாவமன்னிப்புத் தேடுபவருக்கு இந்த எச்சரிக்கையில்லை. எனவே தனது நிர்வாகத்தில்- அது குடும்ப நிர்வாகமாக அல்லது, நாட்டுத் தலைமையாக இருந்தாலும் சரி- மோசடி செய்பவர்களுக்கு "அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை" என உண்மையாளரும், உண்மைப்படுத்தப்பட்டவருமான நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். அதாவது அந்த மோசடியை ஆகுமானதாக எண்ணிச் செய்தால் நரகில் நுழைவார், அல்லது பாவமென ஏற்றுக் கொண்டு செய்தால் சுவனத்திற்கு முந்திச் செல்பவர்தளுடன் பிரவேசிப்பதை விட்டும் குறித்த மோசடி தடுக்கும்.