عن عرفجة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "من أتاكم وأمرُكُم جَمِيْعٌ على رجل واحد، يُريد أن يَشُقَّ عَصَاكُم، أو يُفَرِّقَ جَمَاَعَتَكُم، فاقتُلُوهُ".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அர்ஃபஜா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
முஸ்லிம்கள் ஒரே தலைவருக்குக் கீழ் ஒன்றுபட்ட பின் அவர்களது ஒற்றுமையைக் குலைத்து, கிளர்ச்சி செய்வோருக்கு எதிராக போராடுவதே இந்நபிமொழியின் சாரம்சமாகும். முஸ்லிம்கள் ஒரே தலைவரின் கீழ் ஒன்றுபட்ட பின் வேறு ஒருவன் இத்தலைவரை நீக்க வந்தால் அவனது கெடுதியைத் தடுக்கவும், முஸ்லிம்களின் உயிரைப் பாதுகாக்கவும் அவனைக் கொன்றாவது அதற்கொரு முடிவு கட்டுவது அவசியமாகும்.