عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «الصلوات الخمس، والجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان مُكَفِّراتٌ لما بينهنَّ إذا اجتُنبَت الكبائر».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
ஐவேளை தொழுகையும் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது. பெரும் பாவங்களுக்கு அது குற்றப்பரிகாரமாக ஆகுவதில்லை. அவ்வாறே ஜும்ஆத் தொழுகையும் அதையடுத்து வரும் ஜும்ஆவுக் கிடையிலுள்ளவைகளும் ரமழான் நோன்பு அடுத்த ரமழான் வரையும் பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும் காலமெல்லாம் (சிறு) பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்துவிடுகிறது.