عن عائشة رضي الله عنها : أن النبي صلى الله عليه وسلم قال: «السِّواك مَطْهَرَةٌ للْفَم مَرْضَاةٌ لِلرَّبِّ».
[صحيح] - [رواه النسائي وأحمد والدارمي]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "பல் துலக்கல் வாயை சுத்தம் செய்யும், இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்".
ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்
பல் துலக்கல் வாயிலுள்ள அழுக்குகள், துர் வாடை மற்றும் தீங்கிழைக்கும் அனைத்தையும் நீக்கி வாயை சுத்தப்படுத்தும். மேலும் பற்தூரிகை, பற்பசை போன்று வேறு அசுத்தம் போக்கிகளைக் கொண்டு பற் துலக்கினாலும் பற் துலக்கலின் ஸுன்னத் உண்டாகி விடும். மேலும் அது இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தரும். ஏனெனில் பல் துலக்கலானது அல்லாஹ் அடியானின் மீது திருப்தி அடையும் காரணிகளில் ஒன்றாகும்.மேலும் பல் துலக்களில் பல நன்மைகள் இருக்கின்றன. அது வாயை சுத்தப்படுத்தும், ஈறுகளை பலப்படுத்தும், பார்வையைத் தெளிவாக்கும், சளியை அகற்றும், ஸுன்னாவுக்கு இசைவாக இருக்கும், மலக்குகளுக்கு மகிழ்ச்சியை தரும், இறைவனைத் திருப்திப்படுத்தும், நன்மையை அதிகப்படுத்தும், இரைப்பையை சீர்படுத்தும்.