عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «الفِطرة خَمْسٌ: الخِتَان، والاسْتِحدَاد، وقَصُّ الشَّارِب، وتَقلِيمُ الأَظفَارِ، ونَتْفُ الإِبِط».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
அல்லாஹ் இயல்பாகவே மக்களிடம் வைத்துள்ள ஐந்து மரபுகள் இஸ்லாத்தில் உள்ளன, அவற்றை நிறைவேற்றுபவர் இத்தூய மார்க்கத்திலுள்ள பாரிய சில விடயங்களைச் செய்தவராவார் என்பதை நபியவர்களிடம் செவிமடுத்ததாக அபூ ஹரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள இவ் ஐந்து விடயங்களும் இஸ்லாம் காட்டித் தந்துள்ள சுத்தங்களில் உள்ளவையாகும். 1. ஆணுறுப்பின் மேல் தோலை நீக்குவதன் மூலம் கத்னாச் செய்தல், அத்தோல் தொடர்ந்திருப்பதால் அசுத்தங்கள், அழுக்குகள் ஒன்று சேர்ந்து, பல நோய்கள், காயங்களைத் தோற்றுவித்து விடுகின்றன.2. மருமஸ்தானத்திலுள்ள முடிகளை மழித்தல், அது முன்துவரமாகவோ, பின்துவாரமாகவோ இருக்கலாம். அவை அவ்விடத்தில் தொடர்ந்திருப்பது அசுத்தங்கள் மூலம் மாசடையை வைக்கின்றது. சில வேளை மார்க்க சட்டபூர்வமான சுத்தத்தையும் அது பாதிக்கின்றது. 3.மீசையைக் கத்தரித்தல், இது தொடர்ந்திருப்பது தோற்றத்தை சிதைத்து விடுவதுடன், அதனுடன் பானங்களை அருந்துவதையும் வெறுக்கவைக்கின்றது. இது நெருப்பு வணங்கிகளுக்கு ஒப்பாகும் செயலாகும். 4. நகங்களை வெட்டுதல், அவை நிலைத்திருப்பதால் அழுக்குகள் சேர்ந்து, உணவுடன் கலந்து நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அத்துடன் அவசியம் கழுவ வேண்டிய சில பகுதிகள் நகத்தினுள் மறைந்திருப்பதால் சில வேளை பரிபூரணத் தூய்மைக்குத் தடையாகவும் இது இருக்கலாம். 5. அக்குள் முடிகளைக் களைதல், அவை தொடர்ந்திருப்பதால் துர்வாடைகள் தோன்றுகின்றன.