عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ رَضِيَ اللَّهُ عَنْها أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ:
«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3346]
المزيــد ...
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் பதற்றத்துடன் வந்து,
'அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்...' என்று பதிலளித்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 3346]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸைனப் பின் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பயந்து நடுங்கிய நிலையில்; வந்து 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார்கள்' லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியது விரும்பத்தகாத ஒரு விடயம் நிகழவிருப்பதை எதிர்பார்த்து கட்டியம் கூறுவதையும், அதிலிருந்து விமோசனம் பெற –தப்பிக்க அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவதன் மூலம் மாத்திரமே சாத்தியம் ஆகும் என்பதைக் குறிக்கும். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் - அணை- திறக்கப்பட்டுவிட்டது'. இந்த அணை துல்கர்னைன் அவர்கள் கட்டினார்கள். அது கட்டப்பட்டதை விவரிக்கும் முகமாக தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டினார்கள். அதற்கு ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: எங்களில் ஸாலிஹான முஃமின்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் எம்மீது அழிவை எப்படி ஏற்படுத்துவானா? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாவகாரியங்கள் தீயசெயல்கள் மானக்கேடான விடயங்கள் விபச்சாரம் மதூபானம் ஆகியவை அதிகரிக்கும்போது அழிவு பொதுவாக ஏற்படும் என்று குறிப்பிட்டார்கள்.