عَنْ عَبْدِ اللَّهِ بن مسعودٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكُهُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ، وَمَنْ يَتَّخِذُ الْقُبُورَ مَسَاجِدَ».

[حسن] - [رواه أحمد] - [مسند أحمد: 3844]
المزيــد ...

நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்'.

[நம்பகமானது (ஹஸன்)] - [இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்] - [முஸ்னத் அஹ்மத் - 3844]

விளக்கம்

தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத்தளங்களாக எடுத்து அதன் பால் தொழுவோருமே மக்களில் மிக மோசமானவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சமாதிகளின் மீது பள்ளிகளைக் கட்டுவது இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் வழி என்பதனால் அதன் மீது கட்டுவது ஹராமாக்கப்பட்டிருத்தல்.
  2. சமாதிகளை கட்டியோ கட்டாமலோ அங்கு தொழுவது ஹராமாகும், ஏனெனில் கட்டடம் இல்லாவிடினும் ஸுஜுது செய்யப்படும் அனைத்து இடங்களும் பள்ளியாகும்; மஸ்ஜித் என்பது, கட்டடம் இல்லாதிருந்தாலும் ஸுஜூத் செய்யப்படும் இடங்களுக்கு வழங்கப்படும் ஒரு பெயராகும்.
  3. நல்லடியார்களின் சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்பவர்கள் மக்களில் தீயவர்களாவர், அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அவர்கள் நாடினாலும் சரியே.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு