عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ».

[حسن] - [رواه أبو داود والترمذي وأحمد والدارمي] - [سنن أبي داود: 5195]
المزيــد ...

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'இருபது' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'முப்பது' என்று கூறினார்கள்.

[நம்பகமானது (ஹஸன்)] - [இமாம்களான அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், தாரமீ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் அபூ தாவூத் - 5195]

விளக்கம்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்பட்டுவிட்டன' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு இருபது நன்மைகள்' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு முப்பது நன்மைகள்' என்று கூறினார்கள். அதாவது ஒவ்வொரு சொல்லுக்கும் பத்து நன்மைகள் உண்டு.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. வருபவரே முதலில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஸலாம் கூறவேண்டும்.
  2. ஸலாமின் சொற்கள் அதிகரிக்கும் போது கூலிகள் அதிகரிக்கும்.
  3. ஸலாம் கூறுவதில் பரிபூரணமானது, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறுவதாகும். பதில் அளிப்பதில் முழுமையான வார்த்தை, 'வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறுவதாகும்.
  4. ஸலாம் கூறுவது மற்றும் அதற்கு பதில் அளிப்பது வெவ்வேறான படித்தரங்களைக் கொண்டது. அவ்வாறே நன்மையும் வேறுபடும்.
  5. மக்களுக்கு நன்மையைக் கற்றுக்கொடுத்தல். மேலும், மிகச் சிறந்ததை அடைந்து கொள்ள அவர்களுக்கு விழிப்பூட்டல்.
  6. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : முதலில் ஸலாம் கூறுபவர், 'வரஹ்மதுல்லாஹ்' என்பதையும் கூறினால், பதிலில், 'வபரகாதுஹு' என்பதையும் இணைத்துக் கூறுவது விரும்பத்தக்கதாகும். ஆனால், முதலில் கூறுபவர், 'வபரகாதுஹு' என்பதையும் இணைத்துக் கூறினால், பதிலில் மேலும் அதிகப்படுத்திக் கூறுவது அனுமதிக்கப்படுமா? அதே போன்று, முதலில் கூறுபவரும் 'வபரகாதுஹு' என்பதை விட அதிகமாகக் கூறுவது அனுமதிக்கப்படுமா? இமாம் மாலிக் அவர்கள் தமது முவத்தாவில், 'ஸலாம் வபரகாதுஹு' என்பதனுடன் நிறைவுறுகின்றது' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு