عن ابن مسعود رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم : «الجنة أقرب إلى أحدكُم من شِرَاكِ نَعْلِه، والنار مِثلُ ذلك».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்கள் : "சுவனம் உங்களொருவரின் செருப்பு நாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]
ஒரு மனிதனுக்கு தனது செருப்பு நார் எவ்வளவு சமீபமாக உள்ளதோ அதேபோன்று சுவனமும் நரகமும் அவனுக்கு சமீபமாக உள்ளதாக நபியவர்கள் எமக்கு அறியத் தருகின்றார்கள். அது மனிதனுக்கு மிக நெருக்கமாகவே உள்ளது. ஏனெனில் அவன் சிலவேளை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் ஒரு வணக்கத்தைச் செய்வான், அது இவ்வளவு தூரம் வந்து சேரும் என நினைக்க மாட்டான். ஆனால் அது அவனை சுவனத்தில் நுழைவித்து விடுகின்றது. சிலவேளை தான் அலட்டிக் கொள்ளாத ஒரு பாவத்தைச் செய்திருப்பான், அது அல்லாஹ்வின் கோபத்திற்குக் காரணமாகி அவனை நரகில் அவன் அறியாமலே பல வருடங்கள் தள்ளிவிடுகின்றது.