عن عطاء بن يسار وأبي هريرة رضي الله عنه مرفوعاً: "اللهم لا تجعل قبري وثنا يُعبد، اشتد غضب الله على قوم اتخذوا قبور أنبيائهم مساجد".
[صحيحان] - [حديث عطاء بن يسار: رواه مالك.
حديث أبي هريرة رضي الله عنه: رواه أحمد]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைர (ரலி), அதாஃ பின் யஸார் (ரலி) ஆகியோர் கூறினார்கள் : "இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகி விட்டது".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் - இதனை மாலிக் பதிவு செய்துள்ளார்]
யூத, கிறிஸ்தவர்கள் தமது நபிமார்களின் சமாதிகள் விடயத்தில் அவை சிலைகளாக மாறுமளவிற்கு அளவு கடந்து சென்ற நிலை தனது சமாதி விடயத்தில் தனது சமூகத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என நபியவர்கள் அஞ்சினார்கள். தனது சமாதியை அவ்வாறு ஆக்கிவிடக் கூடாதென இறவனிடம் வேண்டினார்கள். பின் யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் கோபம் ஏற்படக் காரணமாக இருந்ததை விழிப்பூட்டினார்கள். நபிமார்களின் சமாதிகளை வணங்கப்படும் சிலைகளாக மாற்றியதால், ஓரிறைக் கொள்கைக்கு முரணான இணைவைப்பில் வீழ்ந்ததே அதற்குக் காரணமாகும்.