عن عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: «لو أنكم كنتم توَكَّلُون على الله حق توَكُّلِهِ لرزقكم كما يرزق الطير، تَغْدُو خِمَاصَاً، وتَرُوحُ بِطَاناَ».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் பின் கத்தாப் (ரலி) கூறுகின்றார்கள் : "நீங்கள் உமது விடயங்ளை அல்லாஹ்வின் மீது உண்மையாகவே பொறுப்புச் சாட்டினால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகின்றன".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
எமது அனைத்து விடயங்களையும் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுமாறு இந்நபிமொழி எமக்கு வழிகாட்டுகின்றது. உண்மையான தவக்குல் (பொறுப்புச் சாட்டல்) என்பது உலக, ஆன்மீக நலவுகளைக் கொண்டு வருவதிலும், கெடுதிகளைத் தடுப்பதிலும் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதாகும்.ஏனெனில் கொடுப்பதும் தடுப்பதும், நலவு, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமிருந்து மாத்திரம் தான். நலவுகளைக் கொண்டுவருவதற்கும், கெடுதிகளைத் தடுப்பதற்குமுரிய காரணிகளை செய்வதுடன் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதே மனிதனின் கடமையாகும். "எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்", "பொறுப்புச் சாட்டுவோர் அல்லாஹ்விடமே முழுமையாகப் பொறுப்புச் சாட்டவும்", இவ்வாறு செயல்படும் அடியானுக்கு அல்லாஹ் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று உணவளிப்பான். அவை காலையில் வெறும் வயிற்றுடன் சென்று, மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகின்றன.