عن النعمان بن بشير رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «إن الحلال بيِّن وإن الحرام بين، وبينهما أمور مُشْتَبِهَاتٌ لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشُّبُهات فقد اسْتَبْرَأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام، كالراعي يرعى حول الحِمى يوشك أن يَرْتَع فيه، ألا وإن لكل مَلِك حِمى، ألا وإن حِمى الله محارمه، ألا وإن في الجسد مُضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) கூறினார்கள் : ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பு எடுத்துக் கொண்டுவிட்டார். அதில் விழுந்தவர் ஹராத்தில் விழுந்து விட்டவராவார். அனுமதிக்கப்படாத ஒரு பாதுகாப்பு அரணிற்கருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பாளனுக்கு அவர் ஒப்பாகின்றார். ஒவ்வோர் அரசனுக்கும் சொந்தமான ஒரு பாதுகாப்பு அரண் (எல்லை) உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு அரண் (எல்லை), அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும்.அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்ததும், அவ்விருவரும் தடுத்ததும் தெட்டத் தெளிவானவை என்பது பொதுவிதியாகும். சட்டம் தெளிவில்லாமல் சந்தேகத்திற்கிடமான விடயங்களில்தான் முஸ்லிம் மீது அச்சப்பட வேண்டியுள்ளது. இச்சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டவர் ஹராத்தில் வீழ்ந்திடாமல் தனது மார்க்கத்திற்குப் பாதுகாப்பு எடுத்துக் கொண்டுவிட்டார். இதனைச் செய்வதால் மக்களிடமிருந்து வரும் குறை, விமர்சனப் பேச்சுக்களை விட்டும் இவரது மானமும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றது. சந்தேகமானவற்றைத் தவிர்ந்து கொள்ளாதவர் ஒன்றோ ஹராத்தில் வீழ்ந்திடுவார், அல்லது மக்களின் புறப் பேச்சிற்கும், இவரது மானம் கிழிக்கப்படவும் ஆளாவார். இவ்வாறு சந்தேகத்திற்கிடமானவற்றை செய்பவனுக்கு நபியவர்கள் ஓர் உதாரணம் கூறினார்கள். அது உரிமையாளன் பாதுகாப்பு வேலியிட்ட ஓர் நிலத்திற்கருகில் தனது ஒட்டகக் கூட்டத்தை அல்லது, ஆட்டு மந்தையை மேய விட்டவனைப் போன்றாகும். அதற்கருகில் மேய்வதால் அப்பிராணிகள் அப்பாதுகாப்பு அரணிற்குள்ளும் சென்று மேய வாய்ப்புள்ளது. இவ்வாறு தான் சந்தேகமானதைச் செய்பவனும், அதன் மூலம் தெளிவான ஹராத்திற்கு அருகில் நெருங்கி, அதில் வீழ்ந்திடவும் செய்வான். உள்ரங்கமான செயற்பாடுகள் நல்லதா, கெட்டதா என்பதை வெளிப்படையான செயற்பாடுகள் காட்டிக் கொடுக்கின்றன என்பதை நபியவர்கள் சுட்டிக்காட்டி, உடலில் இதயம் எனும் சதைத் துண்டு உள்ளதாகவும், அது சீரானால் முழு உடலும் சீராகும், அது கெட்டு விட்டால் முழு உடலும் கெட்டு விடும் எனத் தெளிவுபடுத்தினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஹலாலானதை செய்வதற்கும், ஹராமானவை, சந்தேகத்திற்கிடமானவை என்பவற்றைத் தவிர்ந்து கொள்ளவும் இந்நபிமொழி தூண்டுகின்றது.
  2. சந்தேகமானவற்றுக்கும் குறிப்பிட்ட சட்டமுள்ளது, அதற்கு மார்க்க ஆதாரமும் உண்டு, அதிகமானோர் அதை அறியாவிட்டாலும் சிலர் அறிந்து கொள்வர்.
  3. தனது சம்பாத்தியம், வாழ்வாதாரம், ஏனைய பரிவர்த்தனைகளில் சந்தேகமானவற்றைத் தவிர்ந்து கொள்ளாதவர் தன்னை பிறர் குறைகூற ஆளாக்கிக் கொண்டுவிட்டார்.
  4. இதயத்தின் மகத்துவத்தை சுட்டிக் காட்டுவதுடன், அதனை சீராக்குவதைத் தூண்டியும் உள்ளது. ஏனெனில் அதுதான் உடலின் பிரதான உறுப்பு, அது சீராவதன் மூலம்தான் உடல் சீராகும், அது கெட்டுப் போவதன் மூலம்தான் உடலும் கெட்டுப் போகும்.
  5. ஹராம், ஹலால் விடயத்தில் பொருட்களை மூன்றாக வகைப்படுத்தலாம், தெளிவான ஹலால், தெளிவான ஹராம், சந்தேகத்திற்கிடமானவை.
  6. ஆன்மீக விடயங்களைப் பேணிப் பாதுகாப்பதுடன், மனித மானத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்.
  7. ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வழிகளை அடைத்தல், இதற்கு மார்க்கத்தில் பல ஆதாரங்கள் உள்ளன.
  8. செயன்முறை ரீதியான மார்க்க சட்டங்களின் அர்த்தங்களைத் தெளிவுபடுத்தும் விதத்தில் உதாரணங்கள் கூறுதல்.