عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الوِلَادَةُ».
[صحيح] - [متفق عليه] - [الأربعون النووية: 44]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் :
"பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்."
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [الأربعون النووية - 44]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறப்பு மற்றும் உறவு முறையின் மூலம் மணம் முடிக்கத் தடைசெய்யப் பட்டவர்களான தந்தையின் சகோதரர்கள் தாயின் சகோதரர்கள் அல்லது சகோதரன் ஆகியோர் பால் குடி உறவாலும் மணம் முடிக்க தடைசெய்யப்பட்டோர் என தெளிவு படுத்துகிறார்கள். அதே போன்று பிறப்பினால் அனுமதிக்கப்படுகின்ற சட்டதிட்டங்கள் யாவும் பால்குடி உறவுக்கும் பொருந்தும்.