عن أنس بن مالك رضي الله عنه مرفوعاً: «يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் : "இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள், நற்சோபனம் சொல்லுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு இலேசையும், இலகு படுத்துவதையும் விரும்பி வந்தார்கள். ஏதேனும் இரண்டு விடயங்களில் தேர்வு வழங்கப்பட்டால் ஹராமாக இல்லாத வரை அதில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள். அன்னாரது "c2">“இலகு படுத்துங்கள் கஷ்டப்படுத்தாதீர்கள்” என்ற பேச்சு எல்லா நிலைமைகளிலும் ஆகும். அன்னாரது "c2">“நற்சோபனம் சொல்லுங்கள் வெறுப்படையச் செய்யாதீர்கள்” என்பதன் மூலம் வெறுப்படையச் செய்வதற்கு பதிலாக நல்ல செய்திகளை தெரிவிப்பதாகும். கெடுதியான, மோசமான செய்திகளை அறிவிப்பது வெறுப்படையச் செய்வதாகும் என்பதே பொருளாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மக்களிடம் அல்லாஹ்வின் நேசத்தை ஏற்படுத்தி, நன்மையை ஊக்குவிப்பதே ஒரு முஃமினின் கடமையாகும்.
  2. இஸ்லாமிய அழைப்புப் பணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையை மதிநுட்பத்துடன் ஆராய்வது அழைப்பாளிக்கு அவசியமாகும்.
  3. நற்செய்தி கூறுதல் மகிழ்ச்சி, ஆர்வத்தைத் தோற்றுவிப்பதுடன், அழைப்பாளருக்கும், அவர் மக்கள் முன்வைக்கும் விடயங்களிலும் ஒரு வித அமைதி ஏற்படுகின்றது.
  4. சிரமப் படுத்தல் விரண்டோடுதல், பின்வாங்கல், அழைப்பாளரின் பேச்சில் சந்தேகம் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றது.
  5. அடியார்கள் மீதான அல்லாஹ்வின் அருள் விசாலமானது, அவர்களுக்காக அவன் சகிப்புத் தன்மை கொண்ட மார்க்கத்தையும், இலகுவான சட்டதிட்டங்களையும் பொருந்திக் கொண்டுள்ளான்.
மேலதிக விபரங்களுக்கு