عن شداد بن أوس رضي الله عنه مرفوعًا:« إن الله كتب الإحسانَ على كل شيء، فإذا قتلتم فأحسِنوا القِتلةَ وإذا ذبحتم فأحسِنوا الذِّبحة، وليحد أحدُكم شَفْرَتَه ولْيُرِحْ ذبيحتَهُ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) கூறினார்கள் : நிச்சயமாக அல்லாஹ், அனைத்தையும் செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் நன்றாக அறுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்களது கத்தியை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள் (குறையுங்கள்).
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு முஸ்லிம் தனது எண்ணம், உள்ரங்கத்தை திருத்தும் படி பணிக்கப்பட்டுள்ளான், தனது கட்டுப்படல், வணக்கத்தை திருந்தச் செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளான், தனது பணி, தொழிலைத் திருந்தச் செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளான், மனிதர்கள்,பிராணிகள் உட்பட, உயிரற்ற பொருட்களுக்குக் கூட உபகாரம் செய்யும் படி பணிக்கப்பட்டுள்ளான். பிராணியை அறுக்கும் போது அதனை அறுப்பதே ஒரு நோவினை என்பதில் ஐயமில்லை, பயன்பாட்டிற்காக அறுப்பதும் அவசியமானதுதான். அவ்வாறெனின் இந்த ஏவலின் நோக்கம் கருணை, இரக்கம், மென்மை போன்றவற்றை சட்டபூர்வமாக அறுக்கும் போது, கொலை செய்யும் போது கூட விசுவாசியின் உள்ளத்தில் இருக்க வேண்டுமென்பதைப் பயிற்றுவிப்பதும், அச்சந்தர்ப்பங்களில் அவற்றை விட்டும் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவே. அறுக்கும் போது,(கொல்லும் போது) திருந்தச் செய்ய வேண்டுமெனின் ஏனைய செயல்களில் இது இன்னும் கடுமையாக வலியுறுத்தப்படுகின்றது என்பதையும் இது உணர்த்துகின்றது. கத்தியைக் கூர்மைப்படுத்திக் கொள்வது, பிராணியின் கஷ்டத்தை எளிமையாக்குவதும் திருந்தச் செய்வதிலும் உள்ளதாகும்.