عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «كان رجل يُدَايِنُ الناس، وكان يقول لفَتَاه: إذا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عنه، لعَلَّ الله أن يَتَجَاوَزَ عنَّا، فَلَقِيَ الله فتَجَاوز عنه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"ஒரு மனிதர் மற்ற மனிதர்களுக்கு கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். தனது வேலையாளுக்கு அவர் "உன்னிடம் கஷ்டப்பட்டவர்கள் எவரேனும் வந்தால் அவருக்கு விட்டுக் கொடுப்பாயாக என்றும் (அவ்வாறு செய்வதன் மூலம்) அல்லாஹ் நம்மையும் விட்டுக் கொடுப்பான்" என்று கூறிவைத்தார். (அம்மனிதர் வபாத்தாகி) அல்லாஹ்வை சந்தித்தான். அல்லாஹ்வும் அவனை (மன்னித்து) விட்டுவிட்டான்" என்று அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஹதீஸின் பொருளாவது: ஒரு மனிதன் மனிதர்களுக்கு கடன் கொடுத்து வந்தார். அல்லது தவணை அடிப்படையில் விற்பனை செய்து வந்தார். மனிதர்களிடமிருந்து கடனைப் பெற்றெடுக்கும் தனது பணியாளனுக்கு அம்மனிதர் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார். "உன்னிடம் கடனாளி ஒருவர் வந்து கடனை நிறைவேற்ற அவனிடம் ஒன்றுமில்லை எனில் அவனை விட்டுக் கொடுப்பாயாக." ஒன்றில் தவணை கொடுப்பதன் மூலம், அவனிடம் வற்புறுத்தி கேட்காமல் விடுவதன் மூலம், அல்லது சிறிது குறைவாக இருந்தாலும் கடனாளியிடம் உள்ளதை பெற்றுக் கொள்வதன் மூலம் விட்டுக் கொடுப்பதாகும். "அல்லாஹ் நம்மையும் விட்டுக் கொடுப்பான்" என்பதன் பொருள் நாம் அவனது அடியாருக்கு விட்டுக் கொடுத்து இலகுபடுத்தி சங்கடம் அளிக்காமைக்காக எம்மை மன்னிப்பான். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்கள் மற்றவர்களுக்கு செய்யும் நற்கிரியைகளுக்கு பொருத்தமான கூலியை கொடுப்பான் என அம்மனிதன் அறிந்திருந்ததனாலும் மேலும் அல்லாஹ் எக்காரியத்தையும் அழகிய முறையில் செய்தவரின் கூலியை வீணாக்கி விட மாட்டான் என்று அறிந்திருந்ததனாலும் அவ்வாறு (தன் அடிமைக்கு) கூறி வைத்தான். அம்மனிதர் (வபாத்தாகி) அல்லாஹ்வை சந்தித்தார். அல்லாஹ்வும் அவனை (மன்னித்து) விட்டுவிட்டான்.” அடியார் மீது காட்டிய அன்பு, இரக்கம், இலகுபடுத்தல் என்பவைகளுக்கான சன்மானமாக அவ்வாறு செய்தான். நஸாயீ, இப்னு ஹிப்பான் போன்ற கிரந்தங்களின் அறிவிப்பின் பிரகாரம் அம்மனிதர் எந்தவொரு நன்மையையும் செய்திருக்கவில்லை. “நிச்சயமாக ஒரு மனிதன் எந்தவொரு நன்மையையும் செய்திருக்கவில்லை. மனிதர்களுக்கு கடன் கொடுத்து வந்தான். தனது பணியாளனுக்கு இலகுவானதை எடு, கஷ்டமானதை விட்டுவிடு, அல்லாஹ் நம்மை (மன்னித்து) விட்டுவிடுவான் என்று கூறினான். அம்மனிதன் அல்லாஹ்வைக் கொண்டு நல்லெண்ணம் கொண்டு அவனது அடியாருக்கு நல்லுபகாரமும் செய்யும் பொழுது அல்லாஹ் அவனது பாவங்களிலிருந்து அவனை மன்னித்து அவனது அமல்களுக்குரிய கூலியையும் வழங்கினான்" என மேற்கண்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நன்மையான விடயங்களைத் தான் முன்நின்று மேற்கொள்ளா விட்டாலும் அதனை ஏவுவோருக்கும் கூலி கிடைக்கும்.
  2. எமக்கு முந்தையவர்களின் மார்க்கத்திலுள்ள விடயங்கள் எமது மார்க்கத்துடன் முரண்படாமலிருக்கும் பட்சத்தில் அதுவும் எமக்கு மார்க்கமாகும்.
  3. கஷ்டவாளிக்குத் தவணை கொடுப்பது, கடனைத் திருப்பிக் கேட்கும் போது நளினமாக நடந்து கொள்வதை இங்கு தூண்டுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு