عن جابر رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم قال: «رحِم الله رَجُلا سَمْحَا إذا باع، وإذا اشترى، وإذا اقْتَضَى».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) கூறுகின்றார்கள் : "விற்றாலும், வாங்கினாலும், கடனை நிறைவேற்றினாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

ஹதீஸின் கருத்தாவது: "அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அருள் புரிவானாக", இது, வாங்குவதிலும், விற்பதிலும், கடன் எடுப்பதிலும் தாராளத் தன்மையோடு நடந்து கொள்பவனுக்கு அல்லாஹ்வின் அருள் வேண்டி கேட்கப்பட்ட ஒரு துஆவாகும். அவ்வாறு நடந்து கொள்பவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். பெரும்பான்மையை கவனித்து ஆண்களைக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது."c2">“விற்றாலும் மென்மையாக நடந்து கொள்வான்” என்பதன் பொருள் விலை கூறுவதில் தாராளமாக நடந்து கொள்வான் என்பதாகும். வாங்குபவனுக்கு பொருட்களின் விலையில் கடினமாக நடந்து கொள்ளமாட்டான். அதன் பெறுமதியை குறைத்து கொடுப்பான். உஸ்மான் பின் அப்பான் ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நஸாயீ, அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் உள்ள அறிவிப்பின் படி "c2">“விற்பதிலும் வாங்குவதிலும் மென்மையாக நடந்து கொண்ட மனிதனை அல்லாஹ் சுவனம் நுழையச் செய்வான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “வாங்கினால்” என்பது பொருளை வாங்கினால் மென்மையாக நடப்பதை குறிப்பிடுகிறது. அதற்கு விலை பேசுவதில் தர்க்கிக்கவோ குறைத்துப் பேசவோ மாட்டான். மாறாக மென்மையோடும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்வான்."c2">“கடனை நிறைவேற்றினாலும்” என்பதன் கருத்து தன் கடனாளியிடம் கடனை கேட்கின்ற போது மென்மையயோடும் ;தாராளமாகவும் நடந்து கொள்வான் கடினமாக நடந்து கொள்ள மாட்டான். ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இப்னு ஹிப்பானின் அறிவிப்பின் பிரகாரம் தன்மீது கடனை; நிறைவேற்றுவதில் தாராளமாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வான். அதனை நிறைவேற்றாது தாமதம் காட்ட மாட்டான். தன்மீதுள்ள கடனை நிறைவேற்றாது விரண்டோட மாட்டான். மாறாக மிகவும் இலகுவாகவும் மனநிறைவோடும் அதனை நிறைவேற்றுவான் என்று கூறப்பட்டுள்ளது.மேற்கூறப்பட்ட நான்கு சாராருக்கும் நபி (ஸல்) அவர்கள் அந்நான்கு சாராரும் வியாபாரம் செய்வதிலும் வாங்குவதிலும் கடனை நிறைவேற்றுவதிலும் மற்றொருவரிடமிருந்து கடனை மீளப் பெறுவதிலும் தாராளமாக நடந்து கொள்ளும் காலமெல்லாம் அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டுமென துஆ செய்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. விற்றல், வாங்கலில் தாரளத்தன்மையுடன் நடப்பது விரும்பத்தக்கதாகும். இது விற்பனையாளர், நுகர்வோர் இரு தரப்பினரும் மறு தரப்பினரைத் துன்புறுத்தும் விதத்திலும், நிர்க்கதிக்குள்ளாக்கும் விதத்திலும் நடந்து கொள்ளாமல் இருப்பதன் மூலமே சாத்தியமாகும்.
  2. கடன்களை நிறைவேற்றக் கோருவதில் மென்மையைக் கடைபிடிப்பதும், அதில் சிலவற்றைத் தள்ளுபடி செய்வதும் விரும்பத்தக்கதாகும்.
மேலதிக விபரங்களுக்கு