+ -

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «من يُرِدِ الله به خيرا يُصِبْ مِنه».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் :"அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான்".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏதேனும் நலனைத் தர நாடினால் அவர்களின் பாவ காரியங்களின் குற்றப் பரிகாரத்துக்கும், அவர்களின் அந்தஸ்த்தின் உயர்வுக்கும் உரிய காரணமாக ஆகுவதற்காக அவர்களின் உயிர், செல்வம், பிள்ளைகள் விடயத்தில் அவர்களைச் சோதிப்பான். சோதனைகளின் முடிவை ஓர் அறிவாளி உன்னிப்பாக அவதானித்தால் ஈருலகிலும் அது அவனுக்கு நலவாகவே இருக்கும். அவனுக்கு சோதனைகள் வரும் போது அல்லாஹ்விடம் தன் தேவைகளை வெளிப்படுத்தி அவனிடம் அடிபணிந்து பிரார்த்தனை செய்து மன்றாடும் சந்தர்ப்பம் வாய்ப்பதே இவ்வுலகில் அவனுக்குக் கிடைக்கும் நலவாகும். மேலும் அதன் மூலம் அவனின் பாவங்கள் அழிக்கப்பட்டு அவனின் அந்தஸ்து உயர்த்தப்படுவதானது அவனுக்கு மறு உலகில் கிடைக்கும் நன்மையாக அமையும். எனவேதான் "பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளில் குறைவை எற்படுத்துவதைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். அதனைச் சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்."(2:151) என்று அல்லாஹ் கூறுகிறான்.மேலும் சோதனைகள் மனிதனுக்கு நல்லதாக அமையும் என ஹதீஸில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஏற்படும் துன்பங்களையும்,துயரங்களையும் சகிப்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வேறு ஹதீஸ்களின் மூலம் நிபந்தனை இடப்பட்டுள்ளது. எனவே சில வேளை மனிதனுக்குப் பல சோதனைகள் ஏற்படுகின்றன. எனினும் அதன் போது அவன் பொறுமையாக இருக்கவில்லையெனில் அது அவனுக்கு நல்லதாக இருக்காது. மேலும் அது அவனுக்கு அல்லாஹ் நலனை நாடிய சோதனையாகவும் இருக்காது. ஏனெனில் காபிர்களை பல் வகையான துயரங்கள் பிடித்துக் கொண்ட போதிலும் அவர்கள் மரணிக்கும் வரையில் குப்ரில்-இறை நிராகரிப்பில்- இருந்து வருகின்றபடியால் அவர்களைப் பீடித்துள்ள துயரங்களைக் கொண்டு அல்லாஹ் நன்மையை நாட வில்லை என்பதில் ஐயமில்லை. எனவே "அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான்" என்பதன் கருத்தாவது அவன் தனக்கேற்பட்டுள்ள துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அது அவனுக்கு நல்லதாக அமையும் என்பதே.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. விசுவாசி தனது மார்க்கத்திலோ, பொருளாதாரத்திலோ பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவான்.
  2. இங்கு முஸ்லிமுக்குப் பாரிய நற்செய்தி உண்டு, ஏனெனில் எந்த முஸ்லிமும் நோவினைப்படாமல் இருப்பதில்லை.
  3. சிலவேளை தனது அடியானின் அந்தஸ்த்தை உயர்த்தி, தரத்தையும் உயர்த்தி, பாவத்திற்குப் பரிகாரமாக ஆக்குவதற்காக, சோதனை அல்லாஹ் தன் அடியானை நேசிப்பதற்கான அடையாளமாகக் கூட இருக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு