عن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً: «من يضمن لي ما بين لَحْيَيْهِ وما بين رجليه أضمن له الجنة».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...
நபி (ஸல்)அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) கூறுகின்றார்கள் : "தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் பொறுப்பேற்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பு ஏற்கிறேன்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் இரண்டு விடயங்களை கடைப்பிடிக்குமாறு வழிகாட்டுகிறார்கள். அவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் தனது அடியார்களில் பயபக்தி உள்ளவர்களுக்கு வாக்களித்த சொர்க்கத்தினுள் நுழைய முடியும் என குறிப்பிடுகிறார்கள். அவ்விடயங்களில் முதாலாவது அல்லாஹ்வை கோபப்படுத்துகின்ற-வெறுக்கின்ற விடயங்களை பேசுவதிலிருந்து நாவை பாதுகாத்தல். இரண்டாவது விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்து மறைவுறுப்பை பாதுகாத்தல் என்பவைகளாகும்.