عَنْ عَائِشَةَ أُمِّ المُؤمنينَ رضي الله عنها قَالَتْ:
كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ كِلاَنَا جُنُبٌ، وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ، وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 299]
المزيــد ...
உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:
பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள் . நபியவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல்) 'இஃதிகாஃப்' இருந்த போது, அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 299]
உம்முல் முஃமினீன்ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுடன் தனது; அந்தரங்க நிலைகள் குறித்த சில விடயங்களை இங்கு குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் அவர்கள் இருவரும் பெருந்துடக்கின் போது ஒன்றாக ஒரே பாத்திரத்திலிருந்து நீர் அள்ளிக் குளித்திருக்கிறார்கள். அத்துடன் மாதவிடாயின் போது சுகம் அனுபவிக்க நாடினால் உடலில் தொப்புல் முதல் முழங்கால் வரை தனது உடலை மறைத்துக்கொள்ளுமாறு பணித்துவிட்டு உடலுறவை தவிர்;த்து அவர்களை அணைத்துக்கொள்வார்கள். நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இஃதிகாப் இருக்கும் போது -ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மாதவிடாய்ஏற்பட்டிருக்கும் நிலையில் - நபியவர்கள் தனது தலையை நீட்ட அவர்களுடைய தலையை கழுவிவிடுவார்கள்.