عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «أكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ».
[حسن صحيح] - [رواه الترمذي]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "சுவனத்தில் அதிகம் நுழைவிப்பது அல்லாஹ்வின்மீதான அச்சமும், நல்ல பண்புகளுமாகும்".
சிறந்தது சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் மீதான அச்சமும் நற்பண்புகளும் சிறப்புக்குறியவை என்பதற்கும், அவை சுவர்க்கத்தை அடையச் செய்யும் காரணிகள் என்பதற்கும் இந்த ஹதீஸ் ஆதாரமாக விளங்குகிறது. எனவே அல்லாஹ்வின் மீதான பயமும்,நற்பண்புகளுமாகிய மகத்தான இவ்விரு கருமங்களும்தான் அடியானை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யும் பாரிய மற்றும் அதிகப்படியான காரணிகளாக விளங்குகின்றன.