عن طارق بن أشيم الأشجعي مرفوعاً: "من قال لا إله إلا الله، وكَفَرَ بما يُعْبَدُ من دون الله حَرُمَ مالُه ودمُه وحِسابُه على الله".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் அஷ்யம் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு மனிதனைக் கொல்வதும், அவனது உடமையை அபகரிப்பதும் இரு விடயங்கள் ஒருங்கிணையும் போதே தவிர ஹராமாக மாட்டாது என நபியவர்கள் இந்நபிமொழியில் விளக்குகின்றார்கள். 1. லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் வார்த்தையை மொழிதல். 2. அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவற்றை மறுக்க வேண்டும். இவ்விரு விடயங்களும் அவனிடம் காணப்பட்டால் வெளிப்படையாக அவனைப் பாதுகாப்பது அவசியமாகும்,உள்ரங்கத்தை அல்லாஹ்விடம் சாட்டிவிட வேண்டும், மதம் மாறுதல் போன்ற மரணதண்டனைக் குற்றம், ஸகாத் தர மறுத்தல், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இழுத்தடித்தல் போன்ற உடமை, மானம் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டாலே தவிர, .