عن أبي هريرة رضي الله عنه قال: قلت: يارسول الله، "من أسعد الناس بشفاعتك؟ قال: من قال لا إله إلا الله خالصا من قلبه".
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார் : மக்களில் உமது பரிந்துரைக்கு மிகத் தகுதியானவர் யார்? என நான் நபி (ஸல்) அவர்களிடம் வினவிய போது "உளத்தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவர்" எனக் கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

மக்களில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரைக்கு மிக அருகதையானவர், தகுதியுள்ளவர் யார் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் இணைவைப்போ, முகஸ்துதியோ கலக்காத உளத்தூய்மையுடன் "லாஇலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்" எனும் சாட்சியத்தைக் கூறியவர்கள் என பதிலளித்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மறுமையில் பரிந்துரை உண்டு என்பதை உறுதிப்படுத்தல். எதிலும் உளத்தூய்மை அவசியமானதாகும். முகஸ்துதி இகழப்பட்ட ஒன்றாகும். அது மறுமையில் பரிந்துரை கிடைக்காமலிருக்கக் காரணமாகும். அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு