عن عبد الله بن مسعود قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«هَلَكَ الْمُتَنَطِّعُون» قالها ثلاثًا.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2670]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் :
'மார்க்கத்தை எல்லை மீறி பின்பற்றுவோருக்கு (தீவிரமானோர்)அழிவு உண்டாகட்டுமாக' இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 2670]

விளக்கம்

எவ்வித சரியான வழிகாட்டலோ அறிவோ இன்றி மார்க்கத்திலும் உலக விவகாரங்களிலும், வார்த்தை மற்றும் செயல்களிலும் தீவிரமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்வோரின் கைசேதம் மற்றும் அழிவு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆ வரம்புகளை மீறி நடந்தோர்களாவர்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அனைத்து விடயங்களிலும் எல்லை மீறி தீவிரமாக ஈடுபடுவதையும், வலிந்து செய்வதையும் ஹராமாக்கியிருத்தல். இவ்வழிமுறையை எல்லா விவகாரங்களிலும் தவிர்ந்திருக்குமாறு தூண்டியிருப்பதோடு, குறிப்பாக வணக்கங்கள், நல்லடியார்களை மதித்தல் போன்றவற்றில் தவிர்ந்து கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளமை.
  2. வணக்க வழிபாடுகளிலும் ஏனைய காரியங்களிலும் பரிபூரணமாக ஈடுபடுவது புகழத்தக்க விடயாமாகும். ஆனால் அவை ஷரீஆவை பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.
  3. முக்கியமான விடயங்களை வலியுறுத்திக் கூறுவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு குறிப்பிட்ட விடயத்தை மூன்று தடவைகள் குறிப்பிட்டார்கள்.
  4. இஸ்லாத்தின் தாராளத்தன்மையும் மற்றும் இலகு தன்மையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (67)
மேலதிக விபரங்களுக்கு