عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "هلك المُتَنَطِّعون -قالها ثلاثا-".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "எல்லை மீறுபவர்கள் அழிந்தனர்" இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒன்றில் ஆழமாகச் சென்று, அளவு கடந்து செல்வது அழிவிற்குக் காரணமாகி விடுமென நபியவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள். இதலிருந்து தடுப்பதே அன்னாரின் நோக்கமாகும். சோர்வு ஏற்படும் வரை வணக்கத்தில் திளைத்திருந்து, பின்னர் விட்டுவிடுதல், பேச்சில் எல்லைமீறி ஆழமாகச் செல்லல் போன்றனவும் இதில் அடங்கும். இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் அளவிற்கு நல்லடியார்களை மகத்துவப்படுத்துவதில் அளவு கடந்து செல்வதே எல்லை மீறலில் கடுமையாக எச்சரிக்கப்பட வேண்டிய, பாரிய விடயமாகும்.