عن عمران بن حصين رضي الله عنه وابن عباس رضي الله عنهما مرفوعاً: «ليس منا من تَطَيَّر أو تُطُيِّر له، أو تَكَهَّن أو تُكِهِّن له، أو سحَر أو سُحِر له؛ ومن أتى كاهنا فصدَّقه بما يقول؛ فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم ».
[صحيح] - [رواه البزار عن عمران بن حصين -رضي الله عنهما-. ورواه الطبراني في الأوسط عن ابن عباس -رضي الله عنهما]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள் : "சகுனம் பார்ப்பவனும், சகுனம் பார்க்கப் பட்டவனும், ஜோசியம் பார்த்தவனும், ஜோசியம் பார்த்துவிடப் பட்டவனும், சூனியம் செய்தவனும், யாருக்காக சூனியம் செய்யப்பட்டதோ அவனும் எம்மைச் சார்ந்தவனல்ல, யார் ஒரு ஜோசியனிடம் சென்று அவன் கூறுவதை உண்மைப் படுத்துகின்றானோ அவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை மறுத்தவனாவான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை அல் பஸ்ஸார் அறிவித்திருக்காறார்

விளக்கம்

இது கடுமையான ஓர் எச்சரிக்கையாகும், சகுனம், ஜோசியம், சூனியம் போன்றவற்றில் தொடர்புபடுவது பெரும்பாவங்களில் உள்ளதென எச்சரிக்கின்றது. மேற்கண்டவற்றை தாம் செய்தாலும், பிறருக்கு செய்து கொடுத்தாலும் இரு தரப்பினரும் சமமே. ஏனெனில் அல்லாஹ்விற்கு மாத்திரம் சொந்தமான மறைமுக அறிவு, மற்றும், புத்தி, கொள்கைகளைக் குழப்பும் செயற்பாடு இதில் உள்ளது. இவற்றில் ஒன்றை நம்புபவன் அறியாமைக்கால செயல்களை இரத்துச் செய்து, அதிலிருந்து புத்தியைப் பாதுகாக்க வந்த இறைச் செய்திகளை மறுத்தவனாவான். கை, மற்றும் பீங்கானில் ஓதிப் பார்த்தல், மனிதனுடைய இன்ப, துன்பங்கள், அவனது வாழ்வாதாரங்களை கிரகங்களுடன் தொடர்பு படுத்துவதும் இதில் அடங்குகின்றது. கடந்த கால இரகசியங்களைக் கூறுபவன், ஜோசியன், நட்சத்திரக் குறி சொல்பவன், கோடு வரைந்து குறி சொல்பவன் ஆகியோருக்கிடையிலான வேறுபாடுகளை இமாம்களான பஃகவீ, இப்னு தைமியா போன்றோர் விளக்கியுள்ளனர். அதன் சுருக்கம் என்னவெனில் மறைவானவற்றை வாதாடும் அனைவரும் ஓன்றோ ஜோசியர் என்ற நாமத்தில் அடங்குவர், அல்லது அதில் கூட்டுச் சேர்வர், ஜோசியன் ஒட்டுக் கேட்கும் ஷைத்தான்களிடம் இருந்து தகவல் எடுத்து எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவப்பவனாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மறைவான அறிவை வாதிடுவது ஓரிறைக் கொள்கையுடன் முரண்படுவதால் அது ஹராமாகும்.
  2. ஜோசியம் போன்றவற்றினூடாக அவ்வாறு வாதிடுவோரை நம்புவது ஹராமாகும், அது இறைநிராகரிப்பை ஏற்படுத்துகின்றது.
  3. ஜோசியர்களைப் பொய்ப்பிப்பதும், அவர்கள் மற்றும் அவர்களது கலைகளை விட்டும் தூரமாவதும் அவசியமாகும்.
  4. நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியதைக் கடைபிடிப்பதும், அதற்கு முரணானதை எறிந்து விடுவதும் அவசியமாகும்.
  5. சகுனம், சூனியம், ஜோசியம் அனைத்தும் செய்வது ஹராமாகும்.
  6. மேற்கண்ட மூன்றையும் சம்பந்தப்பட்டவர்களிடம் செய்ய வேண்டுவதும் ஹராமாகும்.
  7. அல்குர்ஆன் அருளப்பட்டதே அன்றி, படைக்கப்பட்டதல்ல.
மேலதிக விபரங்களுக்கு