عن أنس وأبي هريرة رضي الله عنهما مرفوعاً: «لا يُؤْمِنُ أحدُكم حتى أَكُونَ أَحَبَّ إليه مِن وَلَدِه، ووالِدِه، والناس أجمعين».
[صحيح] - [حديث أنس -رضي الله عنه-: متفق عليه.
حديث أبي هريرة -رضي الله عنه-: رواه البخاري]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள் : "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
இந்நபிமொழியில் நபியவர்கள் எமக்கு அறியத்தரும் விடயம் : ஒரு முஸ்லிம் தனது பிள்ளை, தந்தை, அனைத்து மனிதர்களுடனான நேசத்தை விட தன் மீதான நேசத்தை முற்படுத்தும் வரை அவனுடைய ஈமான் பூரணமடைய மாட்டாது, தண்டனையின்றி நேரடியாக சுவனத்தில் நுழைய முடியுமான ஈமானைப் பெறமுடியாது. ஏனெனில் நபியவர்களை நேசிப்பது அல்லாஹ்வை நேசிப்பதாகும், காரணம், இறைத்தூதர் அல்லாஹ்விடமிருந்து எத்திவைப்பவர், அவனது மார்க்கத்தின் பால் அழைப்பு விடுப்பவர் ஆகும். மார்க்க ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் நடக்காதவரை அல்லாஹ், ரஸூலுடனான நேசம் செல்லுபடியாக மாட்டாது. கவிதைகள் பாடி, விழாக்கள் நடத்தி, பாடல்கள் இயற்றுவதன் மூலம் அந்த நேசம் ஏற்பட மாட்டாது.