عن أسامة بن زيد رضي الله عنهما مرفوعاً: «ما تركت بعدي فتنة هي أضر على الرجال من النساء».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரலி) அறிவிக்கிறார்கள் : "எனக்குப் பின்னர் ஆண்களுக்கு அதிக கவர்ச்சிப் பொருளாக பெண்களை விட வேறெதனையும் நான் விட்டுச் செல்ல வில்லை".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் பெண்கள் சோதனைகளுக்கான (சபலங்களுக்கான) மிகப்பெரும் காரணி என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது அவர்கள் வெளியில் சென்று ஆண்களுடன் கலந்து விட்டாலும், அவர்களுடன் தனிமையில் இருந்தாலும் அவர்களை தவறான வழிக்கு தூண்டி, சத்தியப்பாதையைவிட்டு வலைத்து விடுவதினால் இது நிகழ்கிறது என அறிவிக்கிறார்கள். இங்கு தீங்கு என்பது ஆன்மீகம், லௌகீகம் இரண்டிலும் ஏற்படுகின்றது.