عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لَأَنْ أَقُولَ: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، أَحَبُّ إلَيَّ مِمَّا طَلَعَتْ عليْه الشمسُ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார் : "ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி, புகழ்ந்து, புனிதப்படுத்தி, ஒருமைப்படுத்தி, பெருமைப்படுத்தி அவனை நினைவுகூர்வதை இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது. இந்த திக்ருகள் இவ்வுலகம், அதிலுள்ளவற்றை விட சிறந்தது, ஏனெனில் இவை மறுமையின் செயல்களாகும், அவைதான் நிலையான நல்லறங்கள், அதன் நன்மை நீங்காது, கூலி நின்று விட மாட்டாது, அதே வேளை இவ்வுலகமோ அழிவை நோக்கிச் செல்லக் கூடியதாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி, புகழ்ந்து, புனிதப்படுத்தி, ஒருமைப்படுத்தி, பெருமைப்படுத்தி அவனை நினைவுகூர்வதை இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது.
  2. "ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" ஆகியன நிலையான நல்லறங்களாகும்.
  3. இவ்வுலக பொருட்கள் குறைவானது, அதன் இன்பங்கள் நிலையற்றது.
  4. மறுமையின் இன்பங்கள் நிலையானது, நீங்காதது.
மேலதிக விபரங்களுக்கு