+ -

عَنِ أبي زُهير عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:
«لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا»

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 634]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸுஹைர், உமாரா இப்னு ருஐபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மறைவதற்கு முன்னரும் தொழுத எவரும் நரகம் நுழையமாட்டார்கள். '

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 634]

விளக்கம்

இங்கு நபியவர்கள், யாரெல்லாம், பஜ்ர் தொழுகையையும், அஸ்ர் தொழுகையையும் பேணித்தொழுது வருகின்றார்களோ, அவர்கள் நரகம் நுழையமாட்டார்கள் என அறிவிக்கின்றார்கள். இவ்விரு தொழுகையையும் குறித்துச் சொல்வதற்கான காரணம், இவ்விரண்டும் சிரமமான தொழுகைகளாக இருப்பதாகும். அதேபோன்று, ஸுபஹுடைய நேரம் என்பது, தூக்கத்தில் இன்பமாக இருக்கும் நேரமாகும். அஸ்ருடைய நேரம் என்பது, பகல்பொழுது வேலைகளிலும், வியாபாரத்திலும் ஈடுபடும் நேரமாகும். எனவே, சிரமங்கள் இருந்தபோதிலும், யார் இவ்விரு தொழகைகளையும் பேணி வருகின்றாரோ, அவர் நிச்சயமாக, ஏனைய தொழகைகளையும் பேணித் தொழுது வருவார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பஜ்ர், அஸர் தொழுகைகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது, எனவே அவ்விரண்டையும் பேணுவது அவசியமாகும்.
  2. இந்தத் தொழுகைகளை நிறைவேற்றுபவர், பெரும்பாலும், சோம்பல் மற்றும் முகஸ்துதியை விட்டும் நீங்கியவராகவும், வணக்கத்தை விரும்புபவராகவும் இருப்பார்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு