عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلَّى الله عليه وسلم قال:
«ما مِنْ أحَدٍ يُسلِّمُ علي إلا ردَّ اللهُ عليَّ رُوحي حتى أردَّ عليه السَّلامَ».
[إسناده حسن] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود: 2041]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
'யாராவது எனக்கு ஸலாம் கூறினால், நான் அவருக்கு பதில் அளிப்பதற்காகவேண்டிய, அல்லாஹ் எனக்கு எனது உயிரை மீண்டும் வழங்குவான்.'
[இதன் அறிவிப்பாளர் தொடர் ஹஸனானது-சிறந்தது] - [رواه أبو داود وأحمد] - [سنن أبي داود - 2041]
இங்கு நபியவர்கள், சமீபமாகவோ, தூரமாகவோ இருந்து யாரெல்லாம் தன் மீது ஸலாம் சொல்கின்றார்களோ, அவர்களுக்குப் பதில் அளிப்பதற்காகத் தனது உயிர் மீண்டும் தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கின்றார்கள். (மரணத்திற்கு அப்பாற்பட்ட) பர்ஸக் உடைய மற்றும் மண்ணறையுடைய வாழ்க்கை என்பது, மறைவான ஓர் அம்சமாகும். அதன் யதார்த்தத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். அவன் அனைத்திற்கும் சக்திபெற்றவன்.